மதுரை, ஜன.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை பகுதிக் கிளைகளின் சார்பில் கட்சியின் 23வது மாநில மாநாட் டினை முன்னிட்டு புத்தாண்டை குடும்பங்களோடு கொண்டாடும் விதமாக குடும்பவிழா நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் ஜி.செந்தில் ராஜா தலைமை வகித்தார். பி.தமிழர சன், தேவேந்திரன், பி.அய்யாவு ஆகியோர் முன்னிலை வகித்த னர். முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ராமகிருஷ் ணன் வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா. ரவிச்சந்திரன், எஸ்.கார்த்திக், திருப்பரங்குன்றம் தாலுகா செய லாளர் எம்.ஜெயக்குமார் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் சிறப்புரையாற்றி னார். முன்னதாக பாடல்கள், கவிதைகள், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கட்சியின் உறுப்பினர் கள் குடும்பத்துடன் குழந்தை களோடு கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், குழந்தை கள் நிரஞ்சனா பாரதி - நிதர்சன பாரதி இருவரும் தங்களது உண் டியல் சேமிப்பினை மாநில மாநாட்டு நிதியாக நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேச னிடம் வழங்கினர்.