districts

பெரியகுளம் சார் ஆட்சியர் அவசர கதியில் இடமாற்றம் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்திடுக

தமிழக அரசுக்கு  மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

தேனி ,ஜூன் 3- தமிழக அரசுக்கு சொந்தமான ரூ. 200 கோடி மதிப்பிலான அரசு நிலங்களை மீட்டது ,கனிம வளக் கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் படாத நிலுவையில் பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப்பை அவசர கதியில் இடமாற்றம் செய்யப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை .அவர் பெரியகுளத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியகுளம் சார் ஆட்சியராக ரிஷப் கடந்த 7.7.2021 ஆம் தேதி பொ றுப்பேற்றுக் கொண்டார். பெரிய குளம் கோட்டத்தில்  உள்ள 11 வரு வாய் கிராமங்களில் 216 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக பட்டா வழங்கப் பட்டதை கண்டறிந்து அதை மீட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சி யில் பெரியகுளம் வட்டத்தில் உள்ள வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் நிலத்தை அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த அன்ன பிரகாஷ் மற்றும் உறவினர்கள் ,தாம ரைக்குளத்தில் 60 ஏக்கர் அரசு நிலம் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்லமுத்துவின் சகோதரர் மற்றும் உறவினர்கள், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் அரசு நிலத்தையும்  அரசு அதிகாரிகளின் உறவினர்கள் பெயரில்  அ -பதிவேட்டை திருத்தி முறைகேடாக பட்டா கொடுத்ததை சார் ஆட்சியர் ரிஷப் கண்டறிந்தார். இது தொடர்பாக தனிக்கவனம் செலுத்தி அந்த நிலங்களை மீட்டார்.  இது தொடர்பாக அவர் அளித்த புகாரில் அதிமுக பிரமுகர்கள் ,அவ ரது உறவினர்கள் ,கோட்டாட்சியர் முதல் கிராம நிர்வாக  அலுவலர்கள் வரை 14 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப் பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதேபோல வடவீரநாயக்கன் பட்டி வருவாய் கிராமத்தில் அப கரிக்கப்பட்ட நிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் கனிம வளக் கொள்ளையை  கண்டறிந்த சார் ஆட்சியர் ரிஷப், அதன் மீது மேல் நடவடிக்கை  எடுத்தார் .இது தொ டர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கனிமவள  மற்றும் புவியியல் துறை முன்னாள் உதவி இயக்குநர்கள், வட்டாட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், அதிமுக பிரமுகர் உள்ளிட்டோர் மீது  ஊழல் தடுப்பு சட்டப் பிரிவில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து பணியாற்ற வேண்டும் 

அரசுக்குச் சொந்தமான ரூ 200 கோடி பெறும் அரசு நிலத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தும் , பல கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளக் கொள்ளையை கண்ட றிந்து திறம்பட செயல்பட்டார் ரிஷப். மேலும் மஞ்சளாறு பகுதியில் நீர் வழி புறம்போக்கு நிலம் சுமார் 150 ஏக்கர் வரை அந்த பகுதி யின் செல்வேந்தர் ஒருவர் ஆக்கிர மித்துள்ளது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பிய நிலையில் தற்போது அவசர கதியில் ரிஷப்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் . இந்த வழக்குகளில் துணை ஆட்சியர்கள் ,கோட்டாட்சியர்கள் ,வட்டாட்சியர் என உயர் அதிகாரி கள்,அரசியல் பிரமுகர்கள் சம்பந் தப்பட்டுள்ளதால்  வழக்குகள் நீர்த்துப்போக வாய்ப்பு உள்ளது . இங்கிருந்து பணியாற்றினால் வழக்கு விசாரணைகளுக்கு உத வியாக இருக்கும். எனவே அரசு நிலம் முறைகேடு வழக்கு மற்றும் கனிம வளக் கொள்ளை தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை  ரிஷப்,பெரிய குளம் சார் ஆட்சியராக  பணியாற்ற தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். தமிழக முதல்வர் தலையிட்டு மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.