districts

சாலை முழுமை பெறாத நிலையில் கட்டணக்கொள்ளை தேனி சுங்கச்சாவடி மையத்தை மூட வேண்டும்

தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் தேனி, நவ.30- நான்கு வழிச்சாலை முழுமை பெறாத நிலையில் தேனி அருகே சுங்கச்சாவடி அமைத்து, தனியார் மூலம் கட்டண கொள்ளை நடத்தி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சி.முனீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது .மாநிலச்  செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி ,மாவட்டச் செயலாளர் ஏவி.அண்ணா மலை மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர் . இக்கூட்டத்  தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்  சாலையில், தேனி அருகே உப்பார்பட்டி யில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு அக்டோ பர் 1 ஆம் தேதி முதல் வசூல் செய்யப்பட்டு  வருகிறது. இந்த சாலை வழியாக சபரி மலைக்கு சீசன் காலங்களில் தினமும் ஆயி ரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் சென்று வருவார்கள். இதுமட்டுமின்றி புண்  ணிய தலமாக கருதப்படும் சுருளிதீர்த்தம்,  ஹைவேவிஸ் கேரள மாநிலம் குமுளி,  தேக்கடி, வாகமன் போன்ற சுற்றுலா இடங்க ளுக்கு சுற்றுலா பயணிகளும் இந்த சாலை  வழியாக செல்கின்றனர். சரக்கு போக்கு வரத்தும் இந்த சாலையில் அதிக அளவில்  உள்ளது. இதற்கு கடுமையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது .

திண்டுக்கல் முதல் குமுளி வரையிலான சாலை முழுவதும் இருவழிச் சாலைகளாக  உள்ளது. அனைத்து வாகனங்களும் சாலை  வரி செலுத்தி உள்ள நிலையில் இருவழிச்  சாலை அமைக்கப்பட்டதற்கு சுங்க கட்ட ணம் வசூலிப்பது என்பது மக்களிடம் கொள்  ளையடிக்க கூடிய செயலாகும். இந்தியா முழுவதும் நான்கு வழி சாலைகள் அமைக்  கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தான் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது நடைமுறை யில் உள்ளது. இந்நிலையில் தேனி மாவட்  டத்தில் தேனி மாவட்டம் முழுவதும் இரு வழிச் சாலைகளாக இருக்கின்றன. இதை  தனியார் நிறுவனம் மூலம் வசூல் செய்யப்  படுகிறது .இதில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது மக்களை வஞ்சித்து, ஏற்க னவே இருக்கும் பொருளாதார நெருக்கடி யில் மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டக் கூடிய செயலாகும்.எனவே மாநில அரசு தலையிட்டு தேனியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.