districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வாக்கு கேட்டு பிரச்சாரம்

நாகர்கோவில், பிப்.17- கடந்த இரண்டு நாட்களாக கன்னி யாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதி களில் மழை கொட்டியது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் வீடு வீடாக வாக்கு சேகரிப்பிலும், தெருமுனை கூட்டங்க ளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஈடுபட்டனர். அருமனை பேரூராட்சியில் 7,8,13,14 ஆகிய வார்டுகளின் மதசார்பற்ற ஜன நாயக முற்போக்கு கூட்டணி வேட்பா ளர்களுக்கு வாக்குகள் கேட்டு தெரு முனைக் கூட்டங்களில் நெய்யாற்றின் கரை (கேரளம்) சட்டமன்ற உறுப்பினர் ஆன்சலன் கொட்டும் மழையிலும் பேசி னார். இதுபோல் திற்பரப்பு பேரூராட்சி 7 ஆவது வார்டு அஞ்சுகண்டறையில் சிபிஎம் வேட்பாளர் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், கொட்டும் மழையிலும் வாழை இலையை குடையாக பிடித்துக கொண்டு வாக்கு கேட்டார். அவருடன் திருநந்திக்கரை கூட்டுறவு சங்க தலை வர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.