districts

img

திண்டுக்கல் 11வது வார்டு 10 ஆண்டுகள் மக்கள் சேவையாற்றிய பெருமிதத்துடன் களம்காணும் மாரியம்மாள்

திண்டுக்கல், பிப்.10- திண்டுக்கல் மாநகராட்சியில் 11வது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் கே.மாரி யம்மாள். மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக மாமன்ற கூட்டத்தில் தொடர்ந்து குரல் எழுப்பியவர்.  2006ம், 2011ம் ஆண்டு என 2 முறை இதே வார்டில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் மக்கள் சேவையாற்றி அனு பவம் கொண்டவர். செல்லாண்டியம் மன் கோவில் வடக்குத் தெருவில் புறம் போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா பெற்றுத்தருவதற்காக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் அப்பகுதி மக்களுக்காக களத்தில் போராடியவர்.  10வது வார்டு பகுதியில் தேர்ந்தெ டுக்கப்பட்ட இவர் 11வது வார்டில் உள்ள மவுன்ஸ்புரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்திருந்த டாஸ்மாக் கடையை அகற்ற சிபிஎம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று அந்தக் கடை யை அங்கிருந்து அப்புறப்படுத்தியவர். 10வது வார்டு பகுதி முழுவதும் உள்ள சாக்கடை பிரச்சனை, தெரு விளக்கு, சாலை வசதி, குப்பை மேலா ண்மை, என பகுதி மக்களின் அனைத்து அடிப்படை பிரச்சனைக்காகவும் போராடி தீர்த்தவர். இந்த வார்டு வர்த்தகர்கள் நிறைந்த பகுதி. பொதுவாக ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட வர்த்தகர்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக சிபிஎம் நடத்திய போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து வந்தவர். எதிர்த்தரப்பில் பணபலம் மிகுந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும், கடந்த காலங்களில் தான் ஆற்றிய சேவை களை முன்னிறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என்ற பெரு மிதத்துடன் களம் காணும் இவர் மீண்டும் அப்பகுதி மக்களின் குரலாக விளங்கு வேன் என உறுதியளிக்கிறார்.