தூத்துக்குடி, பிப்.12- தூத்துக்குடி மாநகராட்சியை திமுக வென்றால் மேலும் பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என கனிமொழி எம்பி கூறினார். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பிரச்சாரம் செய்தபோது பேசியதாவது : தமிழக மக்களிடையே குழப்பத்தையும், மக்களின் ஒற்று மையை குலைக்கவும் அதிமுக வும், பாஜகவும் செயல்பட்டு வருகிறது. அவா்களின் பேச்சு க்கு மக்கள் காது கொடுக்க வேண்டியது இல்லை. தமிழ கத்தில் பல்வேறு நல்ல திட்டங்க ளை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உத விக் குழுக்களுக்கு ரூ.92 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி திமுக வசம் இருந்தால் மேலும் நல்ல திட்டங்களை செயல் படுத்த முடியும் என்பதால் மக்கள் திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சரு மான பெ.கீதா ஜீவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.