districts

img

குழந்தை தொழிலாளர் இல்லாத மணியக்காரன்பட்டி கிராமம்

சின்னாளபட்டி, ஜூலை 16-  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி உட்பட்ட மணியக்காரன் பட்டி கிராமம் தமிழக அரசு  மற்றும் சைல்டு வாய்ஸ் தனி யார் தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு தற்போது குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், பள்ளி  இடைநிற்றல் இல்லாத கிரா மமாக அறிவிக்கப்பட்டுள் ளது. பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்பி.முருகேசன் தலைமையில் சைல்ட் வாய்ஸ்  தனியார் தொண்டு நிறு வன இயக்குனர் அண்ணாத் துரை முன்னிலையில் பெயர்ப்பலகை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நிலக் கோட்டை அனைத்து மகளிர்  காவல் சார்பு ஆய்வாளர் சுசீலா சிறப்புரையாற்றினார். ஊர் பிரமுகர்கள், வளர் இளம் பெண்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்  ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.