சிவகங்கை, ஜன.30- மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கீழமேல்குடி கிராமத்தில் பன்றிகளி டமிருந்து விவசாயத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென என்று நீர்நிலை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் வெள்ளமுத்து வலி யுறுத்தியுள்ளார். விளை நிலங்களில் பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இரண்டு ஏக்கரில் நெல் பயிரிட்டு விளைந்த நிலையில் பன்றி கள் விவசாயத்தை அழித்து வரு கின்றன. இரவில் கடும் குளிரில் கொசுக்கடியில் விழித்திருந்து பன்றி கள் வருவதைத் தடுத்து வருகிறேன். இப்பிரச்சனையில் ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.