நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது
மதுரை, செப். 17- நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர் கமலக்கண்ணனை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னையில் ஞாயிறன்று கைது செய்தனர். மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறு வனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகவும், மாதாமாதம் 12 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் தெரி வித்தனர். இதை நம்பி தமிழகம் முழுவதும் ஏராளமானோர் முத லீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடு பட்டதால் முதலீடு செய்த நபர்கள், மதுரை பொருளா தாரக் குற்றப்பிரிவில் புகாரளித்தனர். அதன்பேரில் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிர மணியன் உள்பட 19 பேர் மீது பொருளாதாரக் குற்றப்பிரி வினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததால் பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்க ளைத் தேடி வந்தனர். இந்நிலையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான கமலக்கண்ணன் சென்னை யில் இருப்பதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை சென்ற தனிப்படை காவல்துறை அங்கு தங்கி யிருந்த கமலக்கண்ணனை ஞாயிறன்று கைது செய்த னர். நியோமேக்ஸ் நிறுவன மோசடி தொடர்பாக இது வரை நிறுவனத்தின் 752 வங்கிக்கணக்குகள் மற்றும் அதி லிருந்த ரூ.17.52 கோடியை பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புகையிலைப் பொருட்கள் கடத்தியவர்கள் கைது
தேனி, செப்.17- தேனியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வேனில் கடத்திய வழக்கறிஞர் உள்ளிட்ட ஏழு பேரை ஞாயிற்றுக்கிழமை, காவல்துறையினர் கைது செய்தனர். தேனி, அனுகிரஹா நகர் பகுதியில் தேனி காவல் நிலைய காவலதுறையினர் வாகனத் தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற வேன் மற்றும் ஜீப்பை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் வேன் மற்றும் ஜீப்பில் மொத்தம் ரூ.3.68 லட்சம் மதிப்புள்ள 40 மூடை தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, வேன் மற்றும் ஜீப்பில் இருந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த முகமது யூசுப்(33), கார்த்திகேயன் (21), ஆனந்தகுமார்(32), வழக்குரைஞர் உதயக்குமார்(31), ஆண்டிபட்டியைச் சேர்ந்த விஜய ராகவன்(32), மைசூரைச் சேர்ந்த கெம்பராஜ்(23), பெங்க ளூருவைச் சேர்ந்த தீபக்(23) ஆகிய 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். புகையிலைப் பொருட்கள், கடத்த லுக்குப் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
பட்டாசுகள் பறிமுதல்
சிவகாசி, செப்.17- சிவகாசியில் குடோனில் அனுமதியின்றி வைக்கப் பட்டிருந்த பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருத்தங்கல் அருகே உள்ள கே.கே.நகர். இங்கு காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி மகன் கண்ணன் (32) என்பவர் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த திருத்தங்கல் காவல்துறையினர் பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனர்
பரமக்குடியில் இளைஞர் கொலை
இராமநாதபுரம், செப்.17- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் முன் விரோதம் காரணமாக 22 வயது இளை ஞர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா குமாரகுறிச்சியை சேர்ந்த வீரபாண்டி மகன் ஹரிஷ் (21) மற்றும் இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த அபி பாலன்(21) உள்ளிட்டோர் இடையே முன்விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆற்றுப்பாலம் பகுதியில் மது அருந்திய போது, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து ஹரீஷ் மற்றும் அபிபாலன் இருவரும் ஆற்றுப் பாலம் பகுதியில் நின்றிருந்தனர். அப்போது அங்கே வந்த ஒரு கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தி, வால், உள்ளிட்டவைகளை கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ள னர். பீர் பாட்டிலை உடைத்து ஹரிஸின் முகத்தில் குத்தி சிதைத்துள்ளனர். இதில் ஹரிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அபிபாலன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெருநாய்களுக்கு தடுப்பூசி முகாம்
மதுரை, செப்.17- மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் தெருக்களில் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை முதல் தொடர்ந்து பத்து தினங்களுக்கு நடைபெறு கிறது. இந்த முகாம் தினம்தோறும் காலை 6 மணி முதல் முற்பகல் 10.00 மணி வரை நடைபெறும். சிறப்பு முகாம் நாட்களில் வார்டு பகுதிக்கு மாநகராட்சி ஊழியர்கள் நேரடியாக வந்து தெருநாய் பிடிக்கும் வாகனத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளனர். அந்ததந்த பகுதியின் சமூக ஆர்வலர்கள், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களின் உரிமையா ளர்கள் , நாயால் மனிதர்கள் கடிபடுவது தடுக்கும் சிறப்புப் பணிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. சிறப்பு முகாம் திங்களன்று காலை ஆரப்பாளையம் ரவுண்டானா வில் மேயர் முன்னிலையில் தொடங்குகிறது.
மாற்றுத்திறனாளிகள் சங்க அலுவலகம் திறப்பு
திருவில்லிபுத்தூர், செப்.17- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார் பில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா குன்னூர் கிளையின் சார்பில் சங்க அலுவலகம் திறக்கப் பட்டது. நிகழ்விற்கு கிளைச் செய லாளர் முகேஷ் தலைமை வகித்தார். கிளை நிர்வாகி கள் பழனி, ஜெபராஜ், முரு கன், சங்கரேஸ்வரி, செல்லத் தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.பாலகிருஷ்ணன் “ஹெலன் கெல்லர் சேவை இல்லம்” எனப் பெயர் சூட் டப்பட்டுள்ள அலுவல கத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் கே.நாகராஜ், மாவட்டத் தலைவர் என்.டி.நடராஜன், மாவட்டத் துணைத் தலை வர் செல்வி, தாலுகா துணைத் தலைவர் போத்திராஜ், வத் திராயிருப்பு தாலுகா செய லாளர் என்.கணேசன், தலை வர் அல்போன்ஸ், பொருளா ளர் பழனிச்சாமி, சிஐடியு நிர்வாகிகள் ஜெயக்குமார், பெனரி, ராமர், செல்லச் சாமி, குழந்தைசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.
பேருந்து பற்றாக்குறை: மேலூரில் பயணிகள் கொதிப்பு
மேலூர், செப்.17- மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலை யத்திலிருந்து சிவகங்கை, ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசுப் பேருந்து கள் இயக்கப்பட்டு வருகிறது. ஞாயிறன்று முகூர்த்த நாள் என்பதால் மேலூர் பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமானோர் திரு மண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேருந்துகளுக்காகக் காத்திருந்தனர். ஆனால் காலை 10.30 மணி முதல் சிவ கங்கை, ஏரியூர் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் குழந்தை கள் முதல் முதியவர்கள், பெண்கள் கடும் அவதியடைந்தனர். பேருந்து நிலை யத்தில் கட்டுமானப் பணிகள் நடப்பதால் சுட்டெரிக்கும் வெயிலில் பலமணி நேரம் காத்திருந்தனர். இதனால் அதிருப்திய டைந்த பொதுமக்கள் பேருந்து நிலையம் முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபடத் திரண்டனர். காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து போக்குவரத்து ஊழியர் கள் கூறியதாவது: ஓய்வுபேருந்து ஓட்டுநர் நடத்துநர் களுக்கு பதில் புதிதாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை. காலை 11 மணிக்கு ஏரியூருக்கு செல்ல வேண்டிய பேருந்து இயங்கவில்லை. காலை 9.40 மணிக்கு ஏரியூர் செல்லும் பேருந்தை தவறவிட்டால் பயணிகள் பகல் 1.50 மணி வரை காத்தி ருக்க வேண்டும். ஏரியூருக்கு ஒரு பேருந்து தினமும் ஆறுமுறையும், திருக்கோஷ்டியூ ருக்கு ஒரு பேருந்து எட்டு முறையும் சென்று வருகிறது. ஏரியூர் பேருந்து இரவு அங்கேயே நிறுத்தப்பட்டு அதிகாலை புறப்படுகிறது. பின்னர் பராமரிப்பிற்காக பேருந்து பணி மனைக்கு சென்றுவிடுகிறது. ஏரியூர், சிவ கங்கை பகுதிக்கு கூடுதல் பேருந்துகள் மட்டு மல்ல காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பு வதன் மூலமே “பேருந்து இயங்கவில்லை” என்ற பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென்றனர்.
லாரி மோதியதில் காவலர் பலி
விருதுநகர், செப்.17- நரிக்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காவலர் ஒருவர் உயி ரிழந்தார். இராஜபாளையம் அருகேயுள்ள கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (32). இவர் விருதுநகரில் ஆயுதப் படையில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, நரிக்குடி காவல்நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியில் சேர்ந்தார். சம்பவத்தன்று, மானாசாலையில் செல்ல சோதனைச் சாவடிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந் துள்ளார். மறையூர் பாலம் அருகே வந்த போது, இரு சக்கர வாகனத்தின் மீது, எதிரே வந்த லாரி மோதியது. இதில், ராஜேஸ்வ ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விருதுநகர் சந்தை: பாமாயில், பருப்புகளின் விலை சற்று குறைந்தது
விருதுநகர், செப்.17- விருதுநகர் சந்தையில் கடந்த வாரம் பருப்பு வகைகளின் விலை உச்சத்தை தொட்டது. இந்த வாரம் அவற்றின் விலை சற்றுக் குறைந்துள்ளது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசியப் உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியடப்பட்டு வரு கிறது. அதன் விபரம் வருமாறு : பாமாயில் கடந்த வாரம் 15 கிலோ ரூ.1,380 என விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.1360க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு புதுஸ் நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.16,500-க்கு விற்ப னையானது. சந்தைக்கு வரத்து அதிக ரித்ததால் இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.500 வரை குறைந்து 100 கிலோ ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு நாடு வகை கடந்த வாரம் 100 கிலோ ரூ.13,500க்கு விற் பனை செய்யப்பட்டது. இந்த வாரம் உள்ளூர்- வெளி மாநிலங்களிலிருந்து உளுந்தம் பருப்பு வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மூட்டை ஒன்றுக்கு ரூ.500 வரை விலை குறைந்து 100 கிலோ ரூ.13 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. லயன் உளுந்து வகை 100 கிலோ கடந்த வாரம் வரை ரூ.10,500-க்கு விற்கப் பட்டது. இந்த வாரம் ரூ.500 குறைந்து மூட்டை ஒன்று ரூ.10ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.11 ஆயிரம் வரை விற்பனை செய்யப் பட்டது. இந்த வாரம் ரூ.200 குறைந்து மூட்டை ஒன்று ரூ.10,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாசிப்பயறு இந்தியா லையன் மீடியம் வகை கடந்த வாரம் 100 கிலோ ரூ.12ஆயி ரத்திற்கு விற்பனையானது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைந்து, 100 கிலோ ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்க ளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை.
நத்தம் அருகே விபத்து ஒருவர் பலி
நத்தம், செப். 17- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கோனூரைச் சேர்ந்தவர் காமராஜ்.(50) இவர் தனது நண்பர்களுடன் நத்தம் வழியாக துவரங்குறிச்சிக்கு சுபநிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் அருகே குமரபட்டி விலக்கு பகுதியில் சென்ற போது எதிர் பாராத விதமாக எதிரே வந்த கார் அவர்கள் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே பலி யானார். நத்தம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
வத்தலகுண்டுவில் தேங்கும் கழிவுநீரால் நோய் அபாயம்
சின்னாளபட்டி, செப்.17- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நெடுஞ்சாலை யின் முக்கியப் பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வத்தலகுண்டுவில் நெடுஞ்சாலையில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பிலிஸ்புரம் அருகே தோண்டப்பட்ட இடத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி யுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவும் சூழலில் போன்ற அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மோசமான நிலையில கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம்
கடமலைக்குண்டு,செப்.17- மயிலாடும்பாறை கிராமத்தில் கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலு வலகம் கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில் முறையான பராமரிப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அலுவலகக் கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. மழை பெய்யும் நேரங்களில் கட்டி டத்தின் சில அறைகளுக்குள் மேற்கூரை வழியாக நீர்க்கசிவு ஏற்படுகிறது. இதனால் ஆவணங்கள் மழை நீரில் நனைந்து விடும் அபாயம் உள்ளது. மேற்கூரை சேத மடைந்துள்ளதால் அதிகாரிகள் அச்சத்துடன் பணி யாற்றி வருகின்றனர். ஒன்றிய அலுவலகத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே புதிய அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்கவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய ஒன்றிய அலு வலகம் கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராஜபாளையம் அருகே கொலை
விருதுநகர், செப்.17- இராஜபாளையம் அருகே உள்ள முகவூர் காம ராஜர் முதல் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி-முனீஸ்வரி தம்பதியரின் மகன் பாண்டிகாளி 22). இவர்கள் தெற்கு மலையடிப்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நலையில், பாண்டிகாளி மற்றும் அவரது தாய்மாமன் காளீஸ்வரன் ஆகியோர் மதுபோதையில் அப்பகுதி மக்களிடம் பிரச்சினை செய்தார்களாம். இது குறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படை யில் காளீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு காளீஸ்வரன் மற்றும் பாண்டிகாளி ஆகியோர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (22), ஈஸ்வரன் (30), சுந்தர்ராஜ் (25) ஆகியோர் இருவரிடமும் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலை யில், பாண்டிகாளி கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இதையடுத்த, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பல னின்றி பாண்டிகாளி உயிரிழந்தார். இதுகுறித்து முனீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இராஜபாளையம் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம்
மதுரை, செப்.17- தனது உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 16 வயது சிறுமி வியாழக்கிழமை மதுரையில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார். கடந்த மே மாதம் அந்தச் சிறுமி தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றபோது தனது உறவினரால் பாலில் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து தனது தாயி டம் அவர் தெரிவித்தார். ஆனால் அவரது தாய்நடவடிக்கை சம்மந்தப்பட்ட நபரை கண்டிக்கத் தவறிவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில், வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது, உறவினர் ஒருவர் சிறுமியை தகாத முறையில் தொட்டபோது, சிறுமி எதிர்ப்புத் தெரிவித்தார். கோபத்தில், அந்த நபர் சிறுமியை கீழே தள்ளி பாலி யல் பலாத்காரம் செய்ய முயன்றார். உறவினர் நடை பெற்ற சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டிச் சென்றுள்ளார். வீட்டிலிருந்து அழுது கொண்டே வெளியே வந்த சிறுமியைப் பார்த்த உறவினர் விசாரித்தபோது, சிறுமி நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். அவரும் அதை நம்ப வில்லை. இதையடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சிறுமியை காப்பாற்றி. தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிறுமி யின் புகாரின் அடிப்படையில் மதுரை நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் எம்.மணிகண்டன் (28) மீது, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாது காக்கும் சட்டப்பிரிவு, 2012-இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தூத்துக்குடி, செப். 17 திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவி லில் ஞாயிறன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சுப முகூர்த்த தினம் மற்றும் ஞாயிற் றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமண ஜோடிகள், பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
குமரியில் பலத்த பாதுகாப்பு
நாகர்கோவில், செப்.17- விநாயகர் சதுர்த்தி விழா திங்களன்று (செப்.18) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாநகர பகுதியில் உள்ள விநாயகர் கோவில்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. விநாயகர் கோவில்களிலும் சிலைகளை வைத்து வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். உரிய அனுமதி பெற்று சிலைகளை பதிவு செய்ய வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. ஓலையால் வேயப்பட்ட கூரையில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அருகே 2 தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் பகுதிக்குட்டப்பட்ட இடங்களில் 2 ஷிப்டுகளாக காவலர்கள் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் 22, 23, 24-ஆம் தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. சிலைகளை கரைப்பதற்கு 10 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சொத்தவிளை கடற்கரை, கன்னியாகுமரி கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குதுறை கடற்கரை, பள்ளி கொண்டான் அணை கட்டு, வெட்டுமடை கடற்கரை, மிடாலம் கடற்கரை, தேங்காய்பட்டணம் கடற்கரை, திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு ஆகிய 10 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சாதனை இஸ்ரோ விஞ்ஞானி வி.நாராயணன் பெருமிதம்
கோவில்பட்டி,செப். 17 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நடைபெற்ற நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள வந்த இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனத் திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குனர், முனைவர் வி. நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் கூறி யதாவது: சுதந்திரத்திற்கு பிறகு எல்லா துறைகளி லும் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கி றது. 2047 வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும். அதற்கு சந்திரயான் திட்டம் வெற்றி முதல் படி. சந்திரயான் 3 இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை. அங்குள்ள தாது பொருட்களை எடுத்து ஆய்வு செய்யக் கூடிய வகையில் சந்திரயான் 3 இல் ஏற்பாடு செய்யப்பட்டு அதுவும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது இந்தியா 1967ல் முதன் முதலில் சிறிய ராக்கெட் அனுப்பி விண்வெளி ஆராய்ச்சி யை தொடங்கியது. கடந்த அறுபது ஆண்டு களில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி யில் உள்ள எல்லா திட்டங்களும் இந்திய மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய திட்டங்கள். நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை சந்திரயான் 1 கண்டு பிடித்தது. உலகில் முதன் முதலில் இதை கண்டு பிடித்தது இந்தியா தான். ஒரே வாகனத்தில் 104 செயற்கை கோள்களைகொண்டு விண்வெளியில் சரியாக செலுத்திய நாடு இந்தியா. செவ்வா யில் ஆராய்ச்சி செய்ய மிக குறைந்த செலவில் ஒரே முறையில் வெற்றி பெற்ற நாடு இந்தியா. மற்ற நாடுகள் பலமுறை முயன்று தான் அதில் வெற்றி பெற்றன நிலவில் குடியிருக்க வாய்ப்பு இருப்ப தாகத்தான் கருதுகிறேன். அதற்கு இன்னும் பல ஆய்வுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது அடுத்ததாக இந்தியா சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்வி ஒன்றை செலுத்தியுள்ளது. மேலும் விண்வெளிக்கு மனிதர்களை கொண்டும் சொல்லும் ஆய்வுகளும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
400 மெ.டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு
விருதுநகர், செப்.17- விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளா ண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மூலம், பாசிப்பயறுகளை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் பாசிப்பயறு தலா 200 மெ.டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பாசிப்பயறுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.85.58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசிப்பயறில் அதிகபட்சமாக இதரப் பொருட்கள் கலப்பு 0.1 சதவீதமும், இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதமும், சேத மடைந்த பருப்புகள் 0.5 சதவீதமும், வண்டு தாக்கிய பருப்புகள் 2 சதவீதமும், ஈரப்பதம் 10 சதவீதமும் இருக்கலாம் எனக் கூறப் பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பாசிப்பயறை சம்மந்தப்பட்ட ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் அசல் சிட்டா, கிராமநிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல், வங்கிகணக்கு புத்தக நகல், ஆதார் அட்டைநகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களைச் சமர்ப்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் இக்கொள்முதல் வரும் நவம்பர் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், விவசாயிகளுக்கு பணம் வங்கிகணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டம் தொடர்பான விவரங்களை அறிய 04562 - 260410, 900335 6172 மற்றும் 04566 - 220225, 8248369001 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.