districts

img

மேகமலை அருவியில் அடிப்படை வசதிகளை செய்திடுக!

கடமலைக்குண்டு, மே 21- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேக மலை அருவி அமைந்துள்ளது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் அருவி யில் தற்போது குறைந்த அளவிலான நீர்  வரத்து மட்டுமே காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயி லின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதா லும் பள்ளி விடுமுறை நாட்கள் என்பதா லும் சனிக்கிழமை மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அள வில் இருந்தது. ஆனால் நீர்வரத்து குறைந்த  அளவில் காணப்பட்டதால் ஒரே நேரத்தில்  அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை யடுத்து அருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து குளித்துவிட்டு சென்றனர். சுற்றுலா பயணி களின் வருகை அதிக அளவில் இருந்ததால் மேகமலை வனத்துறையினர் அருவியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.  இதற்கிடையே அருவிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. அத னால் வாகனங்களில் வரும் பொதுமக்கள்  அருவிக்கு செல்ல 1 கிலோ மீட்டர் தொலைவு கரடு முரடான பாதையில் நடந்து  செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதே  போல அருவியில் பெண்களுக்கான உடை  மாற்றும் அறை மற்றும் பாதுகாப்பு வேலி கள் பராமரிப்பு இல்லாமல் காணப்படு கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேகமலை அருவியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.