districts

img

மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்க மாநாடு

மதுரை, நவ.27- பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறு வோர் சங்கத்தின் (ஏஐஐபிஏ) மதுரை மண்டல 23 ஆவது பொதுமாநாடு சனிக்கிழ மையன்று துணைத் தலைவர் ஜி.மணி வேல் தலைமையில் வடக்குமாசி வீதி  சொக்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் ஜெ. குரு மூர்த்தி துவக்கவுரையாற்றினார். யுனைடெட் இந்தியா அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் எஸ்.ஆர்.கண்ணன், மத்திய செயற்குழு உறுப்பினர் எச் வேணு கோபால், மதுரை மண்டல பொது இன்சூ ரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் தலைவர் டி.பிரபு ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர். சங்கத்தின் துணைத்தலைவர் சி.சந்திரசேகரபாரதி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 15 சதத்திலிருந்து 30 சத மாக உயர்த்த வகை செய்திட வேண்டும். ஊதிய உயர்வு வழங்கப்படும் போது அதற்  கேற்ப ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூ தியத்தில் முன்னேற்றம் அளிக்கப்பட வேண்டும். ரயில் கட்டணத்தில் மூத்த குடி மக்களுக்கான சலுகைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்கள் கௌர விக்கப்பட்டனர். சங்கத்தின் தலைவராக ஆர். ராமநாராயணன், பொதுச் செயலாள ராக டி.கோபால்ராஜ், பொருளாளராக பா. மோகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

;