சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16 சனிக்கிழமையன்று நடைபெற்றது. கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், துணை மேயர் டி.நாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். (படங்கள்: ஜெ.பொன்மாறன்)