districts

img

மதுரை: அடிப்படை வசதி செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

மதுரை மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விபத்துகளை உண்டாக்கும் குலமங்கலம் பிரதான சாலையை சீர்ப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல் இருக்கும் வ.உ.சி 1,2 அண்ணா தெரு, பாரதிதாசன் தெரு, சத்யா நகர், ஆபிஸர் டவுன் ஆகிய தெருக்களில் சாலைகளை உடனடியாக அமைத்திட வேண்டும். சத்தியமூர்த்தி பிரதான, சாலை பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்திட வேண்டும், குடிநீரில் சாக்கடை கலப்பதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிபிஎம் பகுதிக்குழு செயலாளர் ஏ.பாலு தலைமையில் மீனாம்பாள்புரம் - குலமங்குலம் பிரதான சாலை, சக்கரை செட்டியார் படிப்பகம் அருகில் நடைபெற்ற இந்த மறியலில், 23ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.