மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றியம் சமயநல்லூர் கிளைச் செயலாளர் பெ.செ.செல்லமுருகன்- செ.இந்திரா அவர்களின் மகன் செ.பாரதி-சு.திவ்யா ஆகியோரது திருமணம் பரவை எம்.எஸ்.மஹாலில் நடைபெற்றது. விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, இரா.விஜயராஜன், சிபிஐ மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் பா.காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.