districts

img

தேசிய சிலம்பாட்ட போட்டியில் பதக்கம் வென்ற மதுரை மாணவர்கள்

மதுரை, மே 9- மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட பனங்காடி ஊராட்சி  கருப்பையாபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ கருப்பசாமி சிலம்பாட்ட குழுவின் சார்பில் சிலம்பாட்ட பயிற்சியாளர் பிரவீன் தலைமையில் ஹரியானா மாநிலம் சோனிபட் நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று,  தங்கம், வெள்ளி வெணகலம் பதக் கங்களை வென்று கிராமத்திற்கு  பெருமை சேர்த்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன், பிரவின்,ஸ்ரீதர்சன், கிரித்திக், ரக்ஷிதா, சுபாஸ்ரீ, பிரகாஷ் ஆகியோர் தங்கம் பதக்கம், பவித்ரா, வெற்றிவேல், பார்த்தசாரதி, பசும்பொன், நிதிஷ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம், சின்னப் பாண்டியன் வெண்கல பதக்கம் என  7தங்கம் பதக்கம், 5 வெள்ளி பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்றனர்.  இதில்  வெள்ளி பதக்கம்  வென்ற  வெற்றிவேல் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றி யம் பனங்காடி கட்சி கிளை உறுப்பி னர் சக்திவேல் மகன் ஆவார்.