districts

மதுரை முக்கிய செய்திகள்

மதுரை - செங்கோட்டை ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்

மதுரை, செப்.2-  மதுரை - செங்கோட்டை - மதுரை ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக மதுரை - செங் கோட்டை - மதுரை முன்பதிவு இல்லாத  சிறப்பு ரயில்கள் (06663/06664) செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 15 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. தற்பொழுது அந்த பராமரிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவில்லிபுத்தூரில் இந்து முன்னணியினரின் ஊர்வலத்தால் பொதுமக்கள் அவதி ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை 

திருவில்லிபுத்தூர், செப். 2  திருவில்லிபுத்தூரில் இந்து முன்னணியின் சார்பில் வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்   ராமகிருஷ்ணாபுரத்தில் துவங்கியது  சிவகாசி மெயின் ரோட்டில் சர்ச் அருகே வந்த போது இந்து முன்னனியினர் திட்டமிட்டே கடும் கூச்சலிட்டனர்.  பேருந்து நிலையம் நோக்கி வரும் வழியில் மசூதி இருப்பதால் ஆரவாரம் இன்றி மேளம் அடிக்காமல் செல்ல வேண்டும் என காவல்துறையினர் கூறியதால் அதைக் கேட்காமல் அப்படித்தான் சொல்வோம் என்று கூறினர்.  காவல்துறையினர் அனுமதிக்க முடியாது என்றதால் மசூதி அருகிலேயே மெயின் ரோட்டில் அடாவடியாக மறியலில் ஈடுபட்டனர். ஊர்வலம் வரும் வழியில்  அரசு மருத்துவமனை இருந்ததால் அவசர சிகிச்சைக்காக  ஆம்புலன்ஸில் வரக்கூடிய நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். பயணிகளும் கடும் அவருக்குள்ளாயினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மறியல் தொடர்ந்த வண்ணம் இருந்தது.  மதுரை சரக டி ஐ ஜி  பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பேசியும் உடன்படவில்லை. கலவரத்தை உருவாக்கும் நோக்கிலேயே இந்து முன்னணி பேச்சு இருந்தது. நீதிமன்ற உத்தரவை மீறி இந்து முன்னணி ஊர்வலம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 தண்ணீர் செல்லாத கண்மாய்களுக்கு   தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுத்திடுக!

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் மோகன் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் 4323 கண்மாய்கள், 4598 ஊரணிகளும் உள்ளன .இக் கண் மாய்களும் ஊரணிகளும் ஒரு காலத்தில் சங்கிலி தொடர் இணைப்பாக இருந்தது. அதாவது ஒரு கண்மாயில் தண்ணீர் நிரம்பினால் அடுத்த கண்மாய்க்கு தண்ணீர் செல்கிற ஏற்பாடு தான் சங்கிலித்தொடர் இணைப்பாகும்.காலப்போக்கில் அவை தூர்ந்துபோய்க்கிடக்கின்றன..பல இடங்களில் அது நடை முறையில் இருக்கிறது .மாவட்டம் முழுவதும் அதே போன்ற நிலை உருவாக வேண்டும் .சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று கொண்டிருக்கி றது. வைகை ஆற்றில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அதற்கான கால்வாய்கள் மேம் படுத்தப்படாமல் இருந்தாலும் பெரும்பாலான கண்மாய்களு க்கு ஓரளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. சில கண்மாய்கள் நிரம்பி இருக்கிறது .பார்த்திபனூர் மதகு அணை யிலிருந்து அடுத்த பகுதி செல்லும்போது இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் செல்கிறது. இந்த மதகு அணையில் இடது பிரதான கால்வாயில் பயன்படுகிற கண்மாய்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளன .சிவகங்கை மாவட்டத்திற்கு பார்த்தி பனூர் மதகு அணை இடது பிரதான கால்வாய் மூலமாக கிடைக் கிற தண்ணீர் முழுமையாக கிடைக்கவில்லை என்பதுதான் விவசாயிகளுடைய குறையாகும். இது தொடர்பாக இரண்டு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .அதேபோன்று வைகை ஆற்றில் வெள்ளமென தண்ணீர் வந்த போதும் மானாமதுரை கண்மாய்க்கும், கீழ்மேல்குடி கண்மாய்க்கும், கால் பிரவு, கிருங்காகோட்டை கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லாத சூழ்நிலை இருப்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒழுங்குபடுத்த வேண்டும் .அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்  தண்ணீர் செல்லாத நான்கு கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட் டத்தில் உப்பாறு, பாம்பாறு ,தேனாறு ,நாட்டாறு, பாலாறு ,சரு குனியாறு இப்படி பல்வேறு சிற்றாறுகள் உள்ளன .இவைகளில் எல்லாம் கருவேலமரங்கள் வளர்ந்து மண்டிக்கிடக்கின்றன. இந்த ஆறுகளை ஒழுங்குபடுத்தி, கருவேலமரங்கள் வெட் டப்பட வேண்டும் .இந்த ஆறுகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க  வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விபத்தில் இறந்தவருக்கு  ரூ.16  லட்சம் வழங்க உத்தரவு

திருவில்லிபுத்தூர். செப். 2-  இராஜபாளையம் வட்டம் தெற்கு வெங்காநல்லூரை சேர்ந்தவர் குமார் இவர் 25 .11 .2020 அன்று கட்டிட வேலைக்காக ஊரிலிருந்து செல்லும் போது முருகன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியதில் இறந்தார்.  இவர் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியில் தனிநபர் காப்பீடு எடுத்திருந்தார். இந்த தொகையை வழங்க கோரி  குமாரின் மனைவி சந்தனம் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் தார். மாவட்ட நுகர்வோர் நீதிபதி டி.சேகர்,  9 சதவீத வட்டியுடன் காப்பீட்டு தொகை 15 லட்சம். வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம்.  மனவேதனை ஏற்படுத்தியதுக்காக ரூபாய் ஒரு லட்சம் சேர்த்து ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

சாத்தூர் அருகே  சரக்கு வாகனம் - பேருந்து மோதல்: 5 பேர் காயம்

சாத்தூர், செப்.2- சாத்தூர் அருகே சரக்கு வாகனம் மீது பேருந்து  மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த வர்கள் சரக்கு வாகனத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேல ஒட்டம்பட்டி கிராமத்திற்கு  வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி ரவீந்திரா பயர் ஒர்க்ஸ் அருகே வந்த போது எதிரே வந்த தனியார் பேருந்து சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மாரீஸ்வரி (40), அவரது மகன்கள் மாரி ரமேஷ் (20), மாரி பாபு (19), தாய் கங்கா தேவி, ஓட்டுநர் சுரேந்திரன் (40) ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவர்களை மீட்டு,  சாத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இதில் படுகாயமடைந்த மாரீஸ்வரி, கங்காதேவி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர்  மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுரை ரயில் நிலைய  நடைமேடையில் பயணி  தூக்குப்போட்டு தற்கொலை 

மதுரை, செப் 2-  மதுரை ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வெள்ளியன்று  அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த பயணிகள் ரயில்வே காவல்துறை யினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து   ரயில்வே காவல்துறையினர்  உடலை மீட்டனர். மேலும் ரயில்வே காவல்துறை  நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட நபர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து இராமேஸ்வரம் வந்ததற்கான பயண சீட்டு இருந்துள்ளது. அதனைவைத்து அவரு டைய ஆதார் மூலம் இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.  மதுரையில் ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் நடமாட்டம் உள்ள மைய பகுதியில் முதியவர் தற்கொலை செய்யும்வரை யாருக்கும் தெரியாத அளவிற்கு நடந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரை ரோந்து பணியில் முறையாக ஈடு படுத்துவது இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக  இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் தற்போது  முதியவர் ஒருவர் தற்கொலை என அடுத்தடுத்து ரயில் நிலை யத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செப்..4 விருதுநகரில் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

விருதுநகர், செப்.2- விருதுநகர் மாவட்டத்தில்  வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் செப்டம்பர் 4 அன்று நடைபெற உள்ளது என்று  மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் Fறிப்பில் கூறியதாவது : இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி,  ஒவ்வொரு வாக்காளரும் தங்களது   ஆதார் எண்ணை  வாக்கா ளர் விபரங்களுடன் இணைக்கும் பணியானது கடந்த ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது.  விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 16,26,710 வாக்காளர்களில் ஆகஸ்ட் 31 வரை  7லட்சத்து 484 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். எனவே, ஆதார் எண்ணை இணைக்காத பொது மக்கள் தங்களது ஆதார் எண்ணினை  இணையதளம்  மூலம்   இணைத்துக்கொள்ளலாம். வாக்காளர்களின்  ஆதார் எண், பொது வெளியில் எக்காரணம் கொண்டும் காட்சிப்படுத்தப்படாது.   எனவே, வரும் செப்டம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை  மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  ஆதார் எண்ணினை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.    வாக்காளர்கள் இவ்வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளி  மருத்துவ முகாம் இடம் மாற்றம்  ஆட்சியர் தகவல்

இராமநாதபுரம்,செப்.2- இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்  ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக  பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.  இதில் முதன்மை திட்டமான மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் இதுநாள் வரை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும்  நடைபெற்று வந்தது. மாற்றுத்திறனாளி களின் பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைந்துள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தில் நடைபெறும் எனவும், இதுவரை மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்   ஜானி டாம் வர்கீஸ்  தெரிவித்துள்ளார்.