மதுரை, மே 10- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்தி ராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்தி கேயன் ஆகியோர் தலைமையில் மே 10 அன்று நடைபெற்றது. முகாமில் குடிநீர், பாதாள சாக் கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 53 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயர் மற்றும் ஆணையாளரால் நேர டியாக பெறப்பட்டது. பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவ டிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் உத்தர விட்டார். இம்முகாமில் மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் அமிர்தலிங்கம், மக் கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வ ரன், உட்பட மாநகராட்சி அலுவ லர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.