மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனின் உள்ளூர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து கீரைத்துறை அருப்புக்கோட்டை நாடார் உறவினர் முறை பள்ளியில் சத்துணவு கூடம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா புதனன்று நடைபெற்றது. நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன், தெற்கு மண்டலத் தலைவர் முகேஷ் ஷர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், தெற்குப் பகுதி செயலாளர் ஜெ.லெனின் மாமன்ற உறுப்பினர் பூமா தேவி மா. செல்லம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.