மதுரை புதூர் பேராயர் இல்லத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமியை மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், துணை மேயர் தி.நாகராஜன், மாநில பல்சமய உரையாடல் குழு செயலர் அருட்தந்தை பெனடிக்ட் பர்ணபாஸ், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் எஸ்.லாரன்ஸ் உடனிருந்தனர்.