districts

img

அதிநவீன உயர் தர செயற்கைக்கால்கள் தயாரித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை

மதுரை, மார்ச் 16- மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில்  விபத்து, நீரழிவு நோய் உள் ளிட்டவற்றால் கால்களை இழந்த நோ யாளிகளுக்கு அதிநவீன உயர்ரக செயற் கைக் கால்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று  நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில்  அரசு மருத்துவமனை முதன்மையர் ஏ.ரத்தினவேல் பங்கேற்று, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள் ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கால் களை இழந்த 11 பேருக்கு அதிநவீன செயற்கைக்கால்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:  விபத்து, நீரழிவு உள்ளிட்ட காரணங்களால் கால் களை இழந்த நோயாளிகளுக்கு தனி யாரிடம் இருந்து செயற்கைக்கால்கள் வாங்கப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு வந்தது. இதற்கு ஒரு செயற்கைக் காலுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வழங்கப்பட்டது. 

ரூ.1.50 லட்சம் செலவில்
இந்நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையின் இயல்பியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவத்துறை யின் கீழ் செயற்கைக்கால்கள் தயார் செய்யும் மையத்தின் மூலம் அதி நவீன உயர் தர செயற்கைக்கால்கள்  தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.  கலைஞர் காப் பீட்டுத்த்திட்டம் மூலமாக நோயாளி களுக்கு இலவசமாக வழங்கப் பட்டுள்ளது.  அரசு ராஜாஜி மருத்துவ மனையில் இந்த கால்களை தயாரிக்க கால் ஒன்றுக்கு ரூ.1.50 லட்சம் மட்டுமே செலவாகிறது.

மேலும், நோயாளிகளின் தேவைக ளுக்கு ஏற்ப அந்த செயற்கைக் கால்  சரியான அளவில் தயார் செய்யப் பட்டு வழங்கப்படுகிறது. அதிலும், கிரேடு 1, 2,3 என வகைகள் உள்ளன. இதில் கிரேடு 1 என்பது, செயற்கைக் கால்கள் பொருத்தினால் சமமான தரைகளில் வீட்டில் மட்டுமே நடக்க முடியும், கிரேடு 2 என்பது சிறிது தூரம் வரை சமமற்ற தரைகளிலும் நடந்து செல்ல முடியும். கிரேடு 3 என்பது, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் கூட பயன்படுத் திக்கொண்டு ஓடவும் முடியும். 

மாரத்தான் போட்டியில்  கூட ஓட முடியும் 
இதில் சிவகங்கையைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர் எட்வர்டு பிரான்சிஸ் என்பவருக்கு கிரேடு 3 வகை உடைய செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது. அவ ருக்கு வழங்கப்பட்ட செயற்கைக் கால் அதிக வலிமையும், மிகக் குறைந்த எடையும், வெப்ப விரிவாக் கத்தையும் தாங்கும் சக்தி கொண்ட கார்பன் பைபர் மல்டி ஆக்ஸிஸ் செயற் கை பாதத்தை கொண்டிருக்கிறது. இதன் மூலம் மாரத்தான் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் அவரால் மற்றவர்களைப் போல் இயல்பாக ஓட முடியும். இவருடன் சேர்த்து  முதற்கட்ட மாக 10 மாற்றுத் திறனாளிகளுக்கு எடை குறைந்த நவீன செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டுள்ளன. இத னால் அவர்கள் மீண்டும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக செய்யப்பட்ட சாதனையாகும் .

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கண் காணிப்பாளர் கணேசன்,  இயல்பி யல் -மறுவாழ்வு மருத்துவத்துறை தலைவர் ரவிச்சந்திரன், முதுநிலை மருத்துவர் வரதராஜன், உதவிப் பேராசிரியை சிந்தியா மற்றும் மருத்து வர்கள் உள்பட பலர் கலந்து கொண்ட னர். இந்நிகழ்ச்சியில் செயற்கைக் காலை பொருத்திக்கொண்டு தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர் எட்வர்டு பிரான்சிஸ் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.