districts

மதுரை முக்கிய செய்திகள்

மதுரை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

மதுரை, அக்.30-  மதுரை மாவட்ட அளவிலான ஜாக்டோ-ஜியோ ஆலோ சனைக் கூட்டம் மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க  கட்டடத்தில் சனிக்கிழமையன்று நடைபெற் றது.  கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.நீதிராஜா, மு.பொற்செல்வன், அ.ஜோயல்ராஜ், வி.ச.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.பி.முருகையன் தொடக்கி வைத்தார் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ. செல்வம் நிறைவுரையாற்றினார்.  கூட்டத்தில் நவம்பர் 1 அன்று  நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரம் ஆசிரியர், அரசு ஊழியர்,  அரசு பணியாளர்களை கலந்து கொள்வது, நவம்பர் முதல் வாரத்தில் மாவட்டம் முழுவதும் வட்டார அள வில் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்துவது, நவம்பர்  15 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும் ஆசிரியர்-அரசு  ஊழியர் அரசு பணியாளர் சந்திப்பு பிரச்சார இயக்கத் திற்கு பிரசுரங்கள் தயார் செய்து அனைத்து ஊழி யர்களையும் சந்தித்து பேசுவது, நவம்பர் 25 அன்று மதுரை  பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே  20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் மாபெரும் மறியலை நடத்துவது, டிசம்பர் 28 அன்று சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகையில் ஒட்டுமொத்த ஊழியர்களும் பங்கெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

காணாமல் போன பெண் குழந்தைகள் ஒப்படைப்பு

சிவகங்கை, அக்.30- சிவகங்கையில் மாவட்ட அளவிலான தனிக்குழு கூட்டம் சட்டப் பணிக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.  இதில், காணாமல் போன பெண்கள் குழந்தைகள் 62 பேர் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டனர். மேலும் 24 குடும்ப பிரச்சனைகள் தீர்வு  காணப்பட்டன. மாவட்ட சிறப்பு ஆய்வுக் குழு உறுப்பி னர்கள் குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறி யப்பட்டு பள்ளியில் சேர்க்கும் பொறுப்பை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

2.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

விருதுநகர், அக்.30- விருதுநகர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அங்கு வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், 60 மூட்டைகளில் 2400 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சரக்கு வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த  காவல்துறையினர், மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த குருபாண்டியராஜனை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த ஆல்பர்ட், செந்தில்குமார் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

அனுமதியின்றி சரவெடி தயாரித்தவர் மீது வழக்கு

வெம்பக்கோட்டை, அக்.30- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் துணை வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைக ளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செவல்பட்டி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தபோது, அங்கு, எவ்வித அனுமதி மற்றும் உரி மம் இன்றி சரவவெடிகளை தயார் செய்தது தெரிய வந்தது.  இதுகுறித்து செவல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைப்பாண்டியன் (48) வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீ சார் விளாமரத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ் (57)  என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.