மதுரை, பிப்.2- மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான மேலூர் எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அவர்கள் முன்னேற்பாடு பணிகள் குறித்து பிப்ரவரி 2 புதனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பினைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூ ராட்சிகள் என மொத்தம் 322 வார்டு களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக, மேலூர் நகராட்சியில் 27 வார்டு கள் உள்ளன. இந்நகராட்சிக்கு உட்பட்டு 17,445 ஆண் வாக்காளர்கள், 18,358 பெண் வாக்காளர்கள்என மொத்தம் 35,803 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் வாக்குப் பதிவுக்காக 11 இடங்க ளில் 11 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண் ணும் மையமாக மேலூர் எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அதன்படி, மாவட்ட தேர்தல் அலு வலர் நேரில் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள பாதுகாப்பு முன்னேற் பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.