districts

img

குறைந்தபட்ச ஊதியம் கோரி மதுரை மாநகராட்சி பணியாளர்கள் போராட்டம்

மதுரை, மே 10-  மதுரை மாநகராட்சி சிஐடியு, விசிக, தமிழ்  நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் செவ்வாயன்று மாநகராட்சி யில் பணிபுரியும் பொறியியல் பிரிவு ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியக் குழு அரசாணை அறிவிப்பின்படி சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மே 10 செவ்வாய்க்கிழமையன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பொறியியல் பிரிவுகளில் ஒப்பந்த அடிப்ப டையில் பணி செய்து வந்தவர்களை ஆட் குறைப்பு என்ற பெயரில் நிறுத்தப்பட்ட ஊழி யர்கள் அனைவருக்கும் திரும்ப பணி வழங்க வேண்டும். புதிதாக மற்றும் ஆளும் கட்சியை  சேர்ந்தவர்களின் நியமனத்தை ரத்து செய்திட வேண்டும். பம்ப்பிங் ஸ்டேசன் மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்க வேண்டும். பொறியியல் பிரிவில்  உள்ள பாதாளச்சாக்கடை, பம்ப்பிங் ஸ்டே சன், தெருவிளக்கு, பிட்டர் கூலி, டிரை வர்கள், பார்க் மஸ்தூர் உள்ளிட்ட பணியா ளர்களுக்கு வருகைப் பதிவேடு பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும். நிரந்தர தன்மை கொண்ட பாதாளச்சாக்கடை, கழிவுநீர் வெளி யேற்றம், தெருவிளக்கு, குடிநீர், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பிரிவுகளிலும் ஒப்பந்த முறை யைக் கைவிட வேண்டும்.

இணைக்கப்பட்ட நகராட்சி , பேரூராட்சி யில் பணி புரிந்த நிரந்தர தூய்மை பணியா ளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த சேம  நலநிதி மற்றும் சிறப்பு சேம நலநிதியை உட னடியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வார்டு அலுவலங்களில் பணியாளர் களுக்கென்று கழிப்பறை வசதி மற்றும் ஓய்வறை அமைத்துக் கொடுக்க வேண்டும்.  அனைத்துப் பணிகளின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து விட்டு நிர்வாகமே ஏற்று நடத்தி சம்பளத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை முன்  வைத்து சிஐடியு மதுரை மாநகராட்சி தொழி லாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதாரப் பணியா ளர்கள் முன்னேற்ற சங்கம், மாநகராட்சி துப்பு ரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் திருவள்ளுவர் சிலை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செய லாளர் எம். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற் சங்கம் பொதுச் செய லாளர் எஸ். பூமிநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார், தமிழ்நாடு சுகாதாரப் பணி யாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலா ளர் எம். அம்சராஜ் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மதுரை மாநக ராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் கருப்பசாமி மற்றும் நிர்வாகிகள், பெண்கள் உள்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.