மதுரை, டிச.13- மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் மாநக ராட்சியில் நிதி மற்றும் வருவாய் இனங்கள் குறித்து தமிழக நிதி- மனிதவள மேலாண் மைத் துறை அமைச்சர் முனைவர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலை யில் பேராசிரியர் ரேமா ஹான்னா (ஹார் வர்டு கென்னடி ஸ்கூல் ஆப் கவர்ன்மென்ட்) என்பவருடன் செவ்வாயன்று ஆலோச னை நடைபெற்றது . இக்கூட்டத்தில் மேயர் இந்திராணி , மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர் ,மாநக ராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை மாநகராட்சியில் நிதி மற்றும் வருவாய் இனங்களை மேம் படுத்துவது குறித்தும் , சென்னை மாநக ராட்சியில் நிதி நிலையை மேம்படுத்துவ தற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சில வழிமுறைகளை மதுரை மாநகராட்சியில் பின்பற்றுவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நீண்ட நாட்களாக சேவை அடிப்படை யில் வைத்து பணம் சம்பாதிக்கும் மருத்துவ மனை மற்றும் கல்வி நிறுவனங்களின் வரிப் பாக்கிகளை குழுக்கள் அமைத்து வசூல் செய்திட வேண்டும். சேவை நோக்கத்தில் செயல்படுகிறதா என்பதை ஆய்வு நடத்த வேண்டும். மதுரை மாநகராட்சி பகுதியில் பெரும் கல்வி நிறுவனங்கள் ,பெரிய மருத்து வமனைகள் வைத்துள்ள வரி பாக்கிகளை உடனடியாக வசூல் செய்திட வேண்டும். மாநகராட்சிக்கான வழக்கறிஞர்கள் குழு முறையாக செயல்பட்டு வழக்குகளை சரியான முறையில் நடத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இதை உடன டியாக சரி செய்திட வேண்டும். பெரும் நிறுவ னங்கள் கட்டிட அமைப்புக்கு மாற்றாக வரி களை கட்டி வருகிறார்கள். எனவே அவற்றை முறையாக அளவீடு செய்ய குழுக்கள் அமைக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.