districts

மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பை தடுத்து நிறுத்துக!

மதுரை, பிப்.9-  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பாண்டி பஜாரில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் மதுரை கல்லூரி மேல்  நிலைப் பள்ளி ( எம்.சி. பள்ளி) உள்ளது. இப்பள்ளியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி யன்று அதிகாலை 6 மணி முதல் 9 மணி  வரை ஆர்.எஸ்.எஸ் எனும்  மதவெறி அமைப்பின் சார்பில் சாகா பயிற்சி  நடை பெற்ள்ளது. இதில் 100 க்கும் அதிகமா னோர் கலந்து கொண்டதாக தெரிகிறது . இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியு றுத்தும் மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளை விக்க கூடிய ஆர்.எஸ்.எஸ் . அமைப்பின் பயிற்சிக்கு பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்  கியது  தமிழக அரசுக்கு களங்கம் விளை விக்கும் நிலை ஏற்பட்டுள்ளது  எனவே , அரசு உதவி பெறும் எம்.சி. மேல் நிலைப்  பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் .அமைப்பின் பயிற்சியை தடை செய்ய வேண்டும் .  இந்நிகழ்வு நடைபெறுவதற்கு உடந்தை யாக இருந்த அதிகாரிகள் , ஆசிரியர்கள் மீது  விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.  இந்திய மாணவர்  சங்க மாவட்டத் தலை வர் டேவிட், செயலாளர் க. பாலமுருகன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அ.  பாவேல் சிந்தன், செயலாளர் டி. செல்வ ராஜ் மற்றும் நிர்வாகிகள் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வியா ழனன்று மனு அளித்தனர்.