மதுரை, மே 29- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மதுரை கிளை யின் 38 ஆவது மாவட்ட மாநாடு செக்கா னூரணியில் எஸ்.பஞ்சரத்தினம், எம். மீனாட்சிசுந்தரம் ஆகியோரது நினைவ ரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் வீரணன் தலைமை வகித்தார். ஒய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட துணைத்தலைவர் ஏ.மதலை கொடியேற்றினார். உசிலம் பட்டி கோட்டச் செயலாளர் வி.பி.நாகநா தன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். உசிலம்பட்டி கோட்டத் தலைவர் என். தனபாண்டி வரவேற்று பேசினார். துவக்கி வைத்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.உமாநாத் பேசினார்.மாவட்டச் செய லாளர் ஆர்.சுரேஷ்குமார், மாவட்டப் பொருளாளர் சி.செல்வராஜ் ஆகியோர் அறிக்கைகள் சமர்பித்தனர். சிஐடியு புற நகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந் தன், விவசாயிகள் சங்கத்தின் த.செல்லக் கண்ணு, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டத் துணைப் பொதுச் செயலாளர் வி.பிச்சைராஜன், மாநிலச் செயலாளர் பி.முத்துலெட்சும ணன், தமிழ்நாடு பவர் இன்ஜினீயர்ஸ் ஆர்கனைசேசன் மாநில அமைப்புச் செயலாளர் கே.ஜீவானந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் நிறைவுரையாற்றினார். என்.பாண்டி நன்றி கூறினார். மாவட்டத் தலைவராக எஸ்.திருமுரு கன், செயலாளராக சி.செல்வராஜ், பொரு ளாளராக ஆர்.சுரேஷ்குமார் மற்றும் துணைத் தலைவர்கள், இணைச் செயலா ளர்கள் உட்பட மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர். மினசார சட்டத் திருத்தம் 2021ஐ உடன டியாக கைவிட வேண்டும். மின் வாரி யத்தில் உள்ள 55ஆயிரம் காலிபணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஒய்வூதிய திட்டம் அல்லது பங்க ளிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை (சிபி எஸ்) ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.