districts

மதுரை விரைவு செய்திகள்

நத்தம் பேரூராட்சி கூட்டம்

நத்தம், பிப்.19- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்  பாட்சா தலைமையில் நடைபெற்றது. செயல் அலு வலர் சரவணகுமார், துணை தலைவர் மகேஸ்வரி சரவ ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் நத்தத்தில்  நடைபெற உள்ள மாரியம்மன் கோவில் மாசி பெருந்திரு விழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி கள், குடிநீர் வசதிகள் செய்து தருவது. மற்றும் நத்தம்  பேருந்து நிலையத்தில் நவீன  கழிப்பறையை நாடாளு மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக  கட்டுவது என்பன உள்பட 15 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 


பிப்.21 கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர், பிப்.18- விருதுநகர் மாவட்டத்தில் கோட்ட அளவில் வரும் பிப்ரவரி 21 அன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடை பெறும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில்,  விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வரும்  பிப்ரவரி 21  காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், அதில் கலந்து கொண்டு  விவசாயம் சம்பந்தப்பட்ட பொது வான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவித்து பயன்பெற லாம் என்று தெரிவித்துள்ளார். 


வருசநாடு வைகை நகரில்  தார்ச்சாலை அமைக்க கோரிக்கை

கடமலைக்குண்டு, பிப்.18- தேனி மாவட்டம், வருசநாடு ஊராட்சிக்கு உட்பட்ட வைகை நகர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் வடக்கு தெருவில் சாக்கடை வடிகால்கள் கட்டப்படாமல் இருந்தது. இத னால் கழிவு நீர் தெருவில் தேங்கின.  இதையடுத்து சாக்  கடை வடிகால் மற்றும் புதிய சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இந்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த வருடம் புதிய சிமெண்ட் ரோடு அமைக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து வடக்கு  தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்காக முதல் கட்ட பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை ஆய்வு செய்த மாவட்ட அதிகாரிகள் தெருப்பகுதி மேடாக  இருப்பதால் சிமெண்ட் சாலை அமைத்தால் விபத்து கள் ஏற்படும். எனவே சிமெண்ட் சாலை அமைக்கும் பணி களை நிறுத்த உத்தரவிட்டனர். மேலும் சிமெண்ட் சாலைக்கு பதிலாக தார்ச்சாலை அமைக்க உத்தரவிட்ட னர். ஆனால் தற்போது வரை தார்ச் சாலை அமைப்ப தற்காக எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. இது  தொடர்பாக வைகை நகர் பொதுமக்கள் கிராம சபை  கூட்டங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்ற னர். மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வைகை  நகர் வடக்கு தெருவில் புதிய தார் ச்சாலை அமைக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.


கல்லூரி மாணவர்கள் விவசாய பயிற்சி

ஒட்டன்சத்திரம், பிப்.18- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே  உள்ள கொ.கீரனூர் கிராமத்தில் ஊரக வேளாண்மை  பணி அனுபவ  பயிற்சியின் ஒரு பகுதியாக மதுரை  வேளாண்மை கல்லூரி 4 ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம பங்கேற்பு மதிப்பீடு நடத்தினர்.   இதில் இவர்கள் கிராமத்தின் இயற்கை வளங் களை வரைபடமாக வரைந்து அவற்றை நிலையாக வேளாண்மைக்கு பயன்படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர். இறுதியாக மரக்கன்றுகள் நட்டு  மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றியும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார். இதில் உள்ளாட்சி பிரதிநிதி கள், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.