districts

மதுரை விரைவு செய்திகள்

தரமான அரிசி வழங்கக் கோரி ரேசன்கடையை மக்கள் முற்றுகை

கடமலைக்குண்டு, நவ.18- தேனி மாவட்டம், வருசநாடு அருகே வாலிப்பாறையில் ரேசன் கடைக்கு செவ் வாய்க்கிழமையன்று இரவு லாரி மூல மாக வந்திருந்த அரிசி மூட்டைகளை பணி யாளர்கள் இறக்கி வைத்துக்கொண்டி ருந்தனர். அப்போது ரேசன் கடைக்கு சென்ற பொதுமக்கள் சிலர் முட்டையில் இருந்த அரிசியை சோதனை செய்தனர். அப்போது மூட்டையில் இருந்த அரிசி தரமற்றதாக இருந்துள்ளது. இதுகுறித்து கிராமத்திற்குள் தகவல் பரவியதை தொடர்ந்து பொதுமக்கள் ரேசன் கடை  முன்பாக கூடி அரிசி மூட்டைகளை இறக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். ரேசன் கடை பணியாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி யும் பொதுமக்கள் உடன்படவில்லை. வருசநாடு போலீசார் வாலிப்பாறை கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரேசன் கடையில் தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சமைத்த பின்பு அரிசியில் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வெளிப்படுவதால் அதனை சாப்பிட முடியவில்லை.எனவே தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி னர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு தெரிவித்து உரிய நட வடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி யளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சாலை விபத்தில்  ஒருவர்  பலி

தூத்துக்குடி, நவ.18- தூத்துக்குடி மாவட்டம், திருச் செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெரு வைச் சேர்ந்தவர் மனுவேல் மகன் யோக ராஜ் (66). இவர் நேற்று திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தபோது  இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கனமழையால் மக்கள் மகிழ்ச்சி

கடமலைக்குண்டு, நவ.18- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக வெயி லின் தாக்கம் அதிக அளவில் காணப் பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை மாலை கடமலை-மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் திடீர் கன மழை பெய்தது. குறிப்பாக கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை பகுதிகளில் இடி யுடன் கூடிய கனமழை பெய்தது. இத னால் கடமலைக்குண்டு அருகே பாலூத்து ஓடையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல கனமழையால் கடமலைக்குண்டு அருகே தேனி சாலையில் அமைந்துள்ள வனத் துறை சோதனைச் சாவடி மற்றும் மயி லாடும்பாறை அருகே பொன்னன்படுகை சாலை பிரிவு ஆகியவற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  வெள்ளிமலை மற்றும் மேகமலை வனப்பகுதிகளில் கனமழை பெய்துள்ள தால் மூலவைகை ஆறு, மேகமலை அருவி ஆகியவற்றில் நீர்வரத்து மேலும் அதி கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் கனமழையால் கடமலை-மயிலை ஒன்றிய பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆண்டிபட்டி பேரூராட்சியில்  குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை

தேனி, நவ.18- கடந்த 2 மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து ஆண்டி பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 12வது வார்டு பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  ஆண்டிபட்டி பேரூராட்சி 12வது வார்டு மேலத்தெரு பகுதி யில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் களை தோண்டி போட்டுவிட்டு அவ்வேலைகளை கிடப்பில் போட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத னால் புதனன்று அப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி பேரூ ராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரி வித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதனை யடுத்து சம்பந்தப்பட்ட 12வது வார்டு பகுதியில், செயல் அலுவலர் சின்னச்சாமி, மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சென்று ஆய்வு செய்தனர்.