குறைதீர் கூட்டங்கள் ஒத்தி வைப்பு
மதுரை, ஜன.8- மதுரை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வாரந்தோறும் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை கொரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டத்திலும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. அலுவலகம் அருகே விஷம் குடித்த நிலத்தரகர்
திருநெல்வேலி, ஜன.8- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோ வில் அருகே உள்ள தம்பத்துகோணம் நாணல் நகரை சேர்ந்தவர் லாரன்ஸ் (60). இவர் வெள்ளியன்று இரவு நெல்லை மாவட்ட காவல்துறை எஸ் பி அலுவல கத்திற்கு வந்தார். அங்கு ஒரு புகார் மனு அளித்தார். பின்னர் எஸ் பி அலுவலகம் அருகே உள்ள ‘வாட்டர் டேங்’ பேருந்து நிறுத்தத் திற்கு வந்த லாரன்ஸ், திடீரென தனது சட்டைப்பையில் வைத்திருந்த விஷப் பாட்டிலை எடுத்து குடித்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெண் பயணிகள் சிலர் அந்த விஷ பாட்டிலை தள்ளிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர் கோவிலை சேர்ந்த ஒரு பெண் தோட்டம் அமைப்பதற்காக நிலம் ஒன்று தேவைப்படுவதாக கூறினார். இதைய டுத்து நெல்லை மாவட்டம் கூந்தங் குளத்தை சேர்ந்த 2 புரோக்கர்கள் மூல மாக கூந்தங்குளம் பகுதியில் 110 ஏக்கர் இடத்தை பத்திரம் முடித்து கொடுத்துள் ளார். இதற்காக புரோக்கர் கமிஷன் தொகையை 3 புரோக்கர்களுக்கும் அந்த பெண் கொடுத்து விட்டார். ஆனால் அந்த இடத்திற்கு தனது சொந்த செலவில் கம்பி வேலி, தென்னங் கன்று உள்ளிட்டவை நட்டுள்ளார். அதற்கான பணத்தையும் தரவேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளார். இதற்கு இடத்தின் உரிமையாளர் மறுத்துவிட்டார். அந்த இடத்தை வேறு ஒருவருக்கு கிரயம் முடித்து கொடுத்துவிட்டார். இதனால் மாவட்ட போலீஸ் எஸ் பி அலுவலகத்தில், எனக்கு வேலி, கன்று அமைத்ததற்கான கமிஷன் தொகை கொடுக்க வேண்டும் என்று புகார் அளித்து விட்டு நான் விஷம் குடித்ததாக கூறினார். இதுதொடர்பாக மூலக்கரைப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவர் பிளான்ட்டில் காப்பர் வயர் திருட முயன்றவர் கைது
தூத்துக்குடி, ஜன.8- தூத்துக்குடி கீழவேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியான் மகன் ஆண்டிராஜ் (37). இவர் அங்குள்ள பவர் பிளான்ட் பகுதிக்குள் நுழைந்து காப்பர் வயரை திருட முயற்சித்துள்ளார். அப்போது அந்நிறுவனத்தின் பணியில் இருந்த செக்யூரிட்டி அலுவலர் கலிய பிள்ளை என்பவர் ஆண்டிராஜை பிடிக்க முற்பட்டபோது ஆண்டிராஜ் கலிய பிள்ளையை அவதூறாக பேசி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நிறுவனத்தின் பொறியா ளர் சாந்தகுமார் (29) அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆண்டி ராஜை கைது செய்தனர்.
சென்னை நிம்மதி இல்லத்தில் சேர ஆட்சியர் அழைப்பு
தூத்துக்குடி, ஜன. 8 சென்னை நிம்மதி இல்லத்தில் விருப்பமுள்ள ஆதரவற்ற முன்னாள் படைவீரர், ஆதரவற்ற கைம்பெண்கள் சேர்ந்து பயன்பெறலாம் என அறி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை அண்ணாமலை புரத்தில் உள்ள நிம்மதி இல்லத்தில் அதிக அளவில் முன்னாள் படைவீரர்களின் முதிர்வடைந்த மற்றும் ஆதரவற்ற கைம்பெண்கள் தங்கி பயன்பெறலாம். எனவே விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்களின் முதிர்வடைந்த மற்றும் ஆதர வற்ற கைம்பெண்கள், தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரி வித்துள்ளார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சரக்கு முனைய சேவை தற்காலிகமாக நிறுத்தம் விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி, ஜன.8 - திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தி லிருந்து துபாய், ஷார்ஜா, குவைத், மலே சியா, கொழும்பு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடு களுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப் பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு சுமார் 20 முதல் 24 உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்தில் செயல்படும் சரக்கு முனையத்தில் திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் விளையும் பூக்கள், காய்கறிகள், பழவகைகள் தினமும் குறைந்த பட்சம் 20 முதல் 25 டன் சரக்கு கையாளப் படுகிறது. இதன் காரணமாக நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.50 முதல் ரூ.60 லட்சம் வரையிலான சரக்குகளை விமான நிறுவ னங்கள் கையாள்கின்றன. தற்போது நிர்வாக காரணங்களுக்காவும், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும், இந்திய விமான நிலைய ஆணையம், ஏற்று மதியாளர்களை விமான நிலையத்திற்கு சரக்குகளை கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஜன. 9 ஆம் தேதி முதல் சரக்கு முனைய சேவை தற்காலிகமாக நிறுத்தப்படு கிறது. மறு திறப்பு தேதி பின்னர் அறி விக்கப்படும் என திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் தெரிவித்து உள்ளார். ஆனாலும் இங்குள்ள பூ, பழம், காய்கறி ஏற்றுமதியாளர்கள், இயக்குனரின் இந்த ஆணையால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு சரக்கு முனை யத்தை மூடக் கூடாது. சரக்குகளை வழக்கம் போல் கையாள வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் பெருத்த நஷ்டத்தை நாங்கள் சந்திக்க நேரிடும். எனவே சரக்கு முனை யத்தை உடனடியாக மூடும் உத்தரவை திரும் பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
நாகர்கோவில், ஜன.8- கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கே.செல்லப்பன், செயலாளர் கே.பி.பெருமாள் ஆகியோர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சருக்கு அனுப் பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பெய்த மழை மற்றும் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீர் குலைந்த கட்டுமானப் பணியாளர்களின் வாழ்வா தாரத்தை மேம்பாடுத்த அரசினரால் எந்த வித நிவாரண மும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் விழாக் காலங்களும் நெருங்கி வருகின்றன. இதனால் பெருகும்செலவினை ஈடுகட்ட இயலாது பெரும் துனபத்தினை சந்தித்து வருகின்றனர். எனவே கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான தொழி லாளர்களுக்கு மழைகால நிவாரணமாக தலா ரூ.2 ஆயிரம், 11 வகையான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்க வேண்டும். நலவாரியத்தில் கட்டுமானத் தொழி லாளர்களின் சேம நலநிதி பலநூறு கோடி ரூபாய் உள்ளது. நிவாரணம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்குவதால் அரசுக்கு எந்தவிதநிதிச்சுமையும் ஏற்படாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மார்க்கெட் நிலவரம் : வரத்து அதிகரிப்பால் வத்தல், பருப்பு விலை குறைந்தது
விருதுநகர், ஜன.8- விருதுநகர் மார்கெட்டில் பருப்பு வரத்து அதிகரித்ததால் கடந்த வாரத்தை விட பருப்பு வகைகளின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 வரை குறைந் துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் பலசரக்கு மற்றும் எண்ணெய் விலை வாரம் தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலை யில், எண்ணெய் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை. குறிப்பாக கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.2700க் கும், நல்லெண்ணெய் தும்பை 15 கிலோ ரூ.4208க்கும், ஆர்.பி.டி பாமாயில் 15 கிலோ ரூ.1840 க்கும் விற்பனை செய்யப் பட்டது. கடந்த வாரமும் இதே விலைக்கே விற்பனை செய்யப் பட்டது. வத்தல் விலை குறைவு : அதேநேரத்தில், ஆந்திர மாநிலத்தில் விளைச்சல் அதி கரித்த காரணத்தால் அங்கிருந்து வத்தல் அதிக அளவில் இறக்கு மதி செய்யப்படுகிறது. இதனால், குண்டூர் வத்தல் 100 கிலோ (ஏ.சி) ரூ.17 ஆயிரம் முதல் 18 ஆயி ரத்து 500 வரை விற்பனையா கிறது. இந்த வத்தலானது, கடந்த வாரம் ரூ.18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். பருப்பு விலை சரிவு : வட மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து துவரம் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் உளுந்து விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், இரு வகையான பருப்புகளின் விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த வாரம் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 400க்கு விற்பனையான உருட்டு உளுந்தின் விலை தற்போது ரூ.8200 ஆக குறைந்தது. மேலும், பாசிப்பருப்பின் விலை ரூ.9400 லிருந்து ரூ.9200 ஆகவும், மசூர் பருப்பு பருவட்டின் விலை குவிண் டால் ஒன்றுக்கு ரூ.200 குறைந்து ரூ.9400க்கும் விற்கப்படுகிறது. பருப்பு மற்றும் வத்தல் விலை குறைந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
சாத்தூர், ஜன.8- சாத்தூர் அருகே மஞ்சள்ஓடைப்பட்டி யில் ஜனவரி 5ம் தேதி பட்டாசு ஆலை யில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதில், ஆலை உரிமை யாளர் பூமாரி, கருப்பசாமி (உயிரிழப்பு), ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகிய 5 பேர் மீது அஜாக்கிரதையாக செயல் பட்டது, உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, 4 பேரும் தலை மறைவாகினர். எனவே, காவல்துறையினர் இரு தனிப்படை அமைத்து 4 பேரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் விஜயகரிசல் குளத்தில் இருந்த பூமாரியை காவல்துறை யினர் கைது செய்தனர். மேலும், தலை மறைவாக உள்ள ஆறுமுகம், நாகேந்தி ரன், பரமேஸ்வரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.