districts

மதுரை முக்கிய செய்திகள்

காந்திகிராம பல்கலை.,யில்  மாணவர் சேர்க்கை

சின்னாளபட்டி, பிப்.2- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்திகிராம பல்கலைக்கழக வளா கத்தில் செயல்பட்டுவரும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழ கத்தின் கற்றல் ஆதரவு மையம் வாயிலாக சான்றிதழ் படிப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை தொலைதூரக் கல்விமுறையில் பயில ஜனவரி 2022ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருகின்றது.  இயற்கை வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, வணிகத் திறன்கள், ஊட்டச் சத்து மற்றும் குழந்தை பராமரிப்பு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, தேனீ வளர்ப்பு போன்ற சான்றிதழ் படிப்பிற்கும், பால்வள தொழில்நுட்பம், ஆரம்பகால குழந்தைப்  பராமரிப்பு மற்றும் கல்வி, பழங்கள் மற் றும் காய்கறிகளை மதிப்புக்கூட்டு பொருட்களாக்குதல், நீர்த்தொட்டி மேலா ண்மை போன்ற பட்டய படிப்பிற்கும், பேரி டர் மேலாண்மை, முதுநிலை படிப்பு உணவு முறைகள் மற்றும் உணவு சேவை கள் மேலாண்மை பட்ட மேற்படிப்பு பட்டய படிப்பிற்கும் மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது. மேலும் இது தொடர்பான விவரங்க ளுக்கு பல்கலை., மனையியல் துறை உத விப் பேராசிரியர் முனைவர். சு.சாகுல் ஹமீதுவை 8300157893, 8124420492 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

வாலிபர் தற்கொலை

கடமலைக்குண்டு, பிப்.2- தேனி மாவட்டம் கண்டமனூரில் மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் தொழி லாளி தற்கொலை செய்து கொண்டார். கண்டமனூரை சேர்ந்தவர் சுதர்சன் (25). கூலி தொழிலாளி. இவருக்கும் இவ ருடைய மனைவி சுபாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தகராறின் போது சுபா, தனது அப்பா வீட்டிற்கு சென்று விட்டார்.  இந்நிலையில், சுதர்சன், புதனன்று மனைவி வீட்டிற்கு சென்று, மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சுபா வின் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட் டுள்ளார்.  ஆனால், சுபா வர மறுத்ததால், மனம் வெறுத்த சுதர்சன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கண்டமனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவில்லிபுத்தூரில் வேட்புமனு தாக்கல்

திருவில்லிபுத்தூர், பிப்.2-  விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூர் நகராட்சியில் 33 வார்டு உறுப்பி னர் பதவிக்கு செவ்வாயன்று வரை மிகக் குறைந்த அளவிலேயே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் புதனன்று திருவில்லிபுத்தூர் நகர் மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதி முக வேட்பாளர்கள் 33 பேரும் 2 ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கௌசல்யா சுரேஷ் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  மனுதாக்கலை முன்னிட்டு திருவில்லி புத்தூர் நகராட்சி அலுவலகம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டனர். வேட்பாளர் களைத் தவிர யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

லாட்டரி விற்றவர்கள் கைது

சிவகாசி, பிப்.2- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்த 4 பேர் மீது காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்தனர். சிவகாசி நகர் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பாவடி தோப்பு அருகே சென்ற போது, தடை செய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரியை சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து, காவல்துறையினர் அவர்களிடம் நடத்தி விசாரணையில், 23 லாட்டரிகள் மற்றும் ரூ.7440 ரொக்கம்  இருப்பது கண்டறியப்பட்டது. பின்பு, விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக், வைர முத்து, வெங்கடேஷ், மணிகண்டன் ஆகி யோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வெடி வைத்திருந்த  2 பேர் மீது வழக்கு

வெம்பக்கோட்டை, பிப்.2- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தடை செய்யப்பட்ட சரவெடி மற்றும் சோல்சா வெடி வைத்திருந்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். வெம்பக்கோட்டை அருகே உள்ளது தாயில்பட்டி. இங்குள்ள கலைஞர் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சோல்சா மற்றும் சர வெடிகள் தயாரிப்பதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், கிருபைதாஸ் ஆகியோர் சோல்சா மற்றும் சரவெடிகளை வைத்திருப்பதாக புகார் செய்தார். அதன்பேரில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த வெம்பக்கோட்டை காவல்துறையினர், 1000 வாலா  சர வெடிகள் மற்றும் 50 கிலோ சோல்சா வெடி களையும் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்  பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை, பிப்.2-  தமிழகத்தில் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளி யாகி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக் கல் செய்து வருகின்றனர்.  இதில், சிவகங்கை மாவட்டம் நான்கு நகராட்சிகளில் உள்ள 117 வார்டுகளில் கவுன்சிலருக்கு 30 பேரும், 11 பேரூராட்சிகளில் 168 வார்டுகளில் கவுன்சிலருக்கு 47 பேரும் வேட்புமனு மனு தாக்கல் செய்துள்ளனர்.  சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 5 பேரும், காரைக்குடியில் 36 கவுன்சிலருக்கு 7 பேரும், தேவ கோட்டையில் 27 வார்டுகளில் கவுன்சிலருக்கு 17 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  மானாமதுரை நகராட்சி  தனித்தொகுதியில் 27 வார்டு கவுன்சிலருக்கு ஒருவரும், இளையான்குடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் கவுன்சிலருக்கு 7 பேரும், கானாடுகாத்தான் பேரூ ராட்சியில் 12-வார்டுகளில் கவுன் சிலருக்கு ஒருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.  கண்டனூரில் 15-வார்டுகளில் கவுன்சிலருக்கு 7 பேரும், கோட் டையூர் பேரூராட்சியில் 15-வார்டு களில் கவுன்சிலருக்கு 4 பேரும், நாட்டரசன்கோட்டை பேரூ ராட்சியில் 12-வார்டுகளில் கவுன் சிலருக்கு 8 பேரும், நெற்குப்பை பேரூராட்சியில் 12-வார்டுகளில் கவுன்சிலருக்கு இரண்டு பேரும், பள்ளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் கவுன்சிலருக்கு 4 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  புதுவயல் பேரூராட்சியில் 15-வார்டுகளில் கவுன்சிலருக்கு 5 பேரும், சிங்கம்புணரி பேரூ ராட்சியில் 18-வார்டுகளில் கவுன் சிலருக்கு 5 பேரும், திருப்புவனம் பேரூராட்சியில் 18-வார்டுகளில் கவுன்சிலருக்கு 3 பேரும், திருப் பத்தூர் பேரூராட்சியில் 18-வார்டு களில் கவுன்சிலருக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள் ளனர்.

சிபிஎம் வேட்பாளர் அறிவிப்பு

தேனி, பிப்.2- தேனி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போட்டி யிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை வெளியிட்டுள் ளார். அதன்படி தேனி நகராட்சி 13 ஆவது வார்டு எம்.மஞ்சு, பெரிய குளம் நகராட்சி 13வது வார்டு மதன்குமார், பூதிப்புரம் பேரூ ராட்சி 8 ஆவது வார்டு -சி.முனீஸ் வரன், தென்கரை பேரூராட்சி 1  ஆவது வார்டு - சௌந்திரபாண்டி யன், தாமரைகுளம் 7 ஆவது வார்டு- சாந்தி, கெங்குவார்பட்டி 1 ஆவது வார்டு வீரு.மார்க்கை யன், கோட்டை 1 ஆவது வார்டு-பி. சக்திவேல், பி.சி.பட்டி11 ஆவது வார்டு -ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுவர். வடுகபட்டியில் தனித்து போட்டி வடுகபட்டியில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தனித்து  போட்டியிட முடிவு செய்யப்பட் டுள்ளது. அதன்படி வடுகபட்டி 5 ஆவது வார்டில் கணேசன், 6 ஆவது வார்டில் உமாமகேஸ் வரி, 7 ஆவது வார்டில் முத்து கிருஷ்ணன் ஆகியோர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுவர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேனி வடக்கு மாவட்டம் திமுக -சிபிஎம் உடன்பாடு

தேனி, பிப்.2- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் தேனி வடக்கு மாவட்டத்தில் திமுக -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடப் பங்கீட்டில் உடன் பாடு எட்டப்பட்டது. திமுக -மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை செவ்வாய்க் கிழமை இரவு நடைபெற்றது. திமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க.தமிழ்செல் வன், நகர் பொறுப்பாளர் பால முருகன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜசேகர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் டி. வெங்கடேசன், மாவட்டச் செய லாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.ராமச்சந்திரன், சி.முனீஸ் வரன், இ.தர்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போடி நகராட்சி வார்டு எண் -1, தேனி நகராட்சி வார்டு எண் -13, பெரியகுளம் நக ராட்சி வார்டு எண் -13, மார்க்கை யன்கோட்டை பேரூராட்சி வார்டு எண் -1, பழனிசெட்டிபட்டி பேரூ ராட்சி வார்டு எண் -11, பூதிப்புரம் பேரூராட்சி வார்டு எண் -8, தாம ரைக்குளம் பேரூராட்சி வார்டு எண் -7, கெங்குவார்பட்டி பேரூ ராட்சி வார்டு எண் -1, தென்கரை பேரூராட்சி வார்டு எண் -1 ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

மோடி அரசை கண்டித்து போராட்டம்

அருப்புக்கோட்டை, பிப்.2- ஒன்றிய பாஜக அரசு, விவசாயி களுக்கு தொடர்ந்து துரோகம் விளை விப்பதை கண்டித்தும், 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி உயர்வு வழங்கிடக் கோரி யும் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பி னர் ஏ.ராமலட்சுமி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் இரவிச்சந்திரன் முன் னிலை வகித்தார். சிஐடியு தலைவர் அண் ணாத்துரை துவக்கி வைத்துப் பேசினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.கணே சன் ஆதரித்துப் பேசினார். மாவட்டத் தலை வர் எஸ்.பூங்கோதை கண்டன உரையாற்றி னார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தனியார் பேருந்து மோதி ஒருவர் பலி:  பேருந்தை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு

கடமலைக்குண்டு, பிப்.2- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே செவ்வாயன்று தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துப்பாண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதனையடுத்து அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் விபத்தை ஏற்படுத்திய தனி யார் பேருந்தை அடித்து நொறுக்கினர். சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடை பெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. இதனையடுத்து காவல்துறை யினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் னர் சுமூக உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.  இதனைத்தொடர்ந்து தனியார் பேருந்து கடமலைக்குண்டு காவல் நிலை யத்திற்கு கொண்டு வரப்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அப்போது மறியலில் ஈடு பட்டு தனியார் பேருந்தை சேதப்படுத்திய தாக செங்குளம், ஓட்டணை ஆகிய கிரா மங்களை சேர்ந்த பலர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை தேடி வரு கின்றனர்.

பிளஸ்1 மாணவியை கடத்தியவர் கைது

குழித்துறை, பிப். 2- கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண் டம் அருகே 11ஆம் வகுப்பு மாணவியை செல்பேசி மூலம் காதல்வயப்படுத்தி நாகபட்டினம் கடத்தி சென்று குடும்பம்  நடத்தி வந்த  வாலிபரை காவல்துறை யினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் அஜின் 20, பெயிண்டிங் வேலை செய்து வரும் இவருக்கு மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பேரை பகுதியில் உறவினர் கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் அஜின் தனது தொலைபேசியில் பேரையில் உள்ள உறவினருக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். அப்போது தவறுதலாக பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கால் சென்றுள்ளது. அழைப்பை எடுத்த மாணவி ராங்க் நம்பர் என கூறி துண்டித்து உள்ளார். எதிர்முனையில் பேசியது பெண் என்பதை தெரிந்து கொண்ட அஜின் அந்த எண்ணை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துகொண்டு சில நாட்கள் கழித்து மீண்டும் அழைத்துள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் அஜின், மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்றுள்ளார்.இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மகளை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர் எங்கும் கிடைக்காத நிலையில் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்டதில் அஜின், மாணவியுடன் நாகப்பட்டினத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாணவியை மீட்ப தற்காக காவல்துறையினர் நாகப்பட்டி னம் சென்று இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். மாணவி யை கடத்தி சென்று குடும்பம் நடத்திய குற்றத்திற்காக அஜின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யபட்டு முகாமில் தங்கவைத்துள்ளனர்.

ஜம்பு நதி ஓரம் குப்பைக்காக தோண்டிய  பள்ளங்களில் முதுமக்கள் தாழிகள்..!

தென்காசி,பிப். 2- தென்காசி மாவட்டம் கடையம் ஜம்பு நதியை ஒட்டி தெற்கு கடையம் பஞ்சா யத்துக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் குப்பைகளை கொட்டுவதற்காக  ராட்சத பள்ளங்களை தோண்டிய போது முதுமக்கள் தாழிகள், பழங்கால ஓடுகள், சாமி சிலைகள் கிடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த விஷயத்தை வேண்டு மென்றே தொல்லியல் துறைக்கு தெரியா மல் மறைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொல்லியல் துறை இந்த இடத்தில் முறையான ஆய்வு மேற்கொண் டால் கீழடியை போன்றே பழங்கால தமிழர்க ளின் வரலாறு வெளிப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல்: 9 வார்டுகளுக்கு சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு

நாகர்கோவில், பிப். 2- நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் 9 வார்டுகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி புதனன்று (பிப்.2) வெளியிட்டார். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வியாழனன்று அறிவிக்கப்பட்டு அனைவரும் அன்றைய தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில, நகர்புற உள்ளாட்சி தேர்தலை திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் எதிர்கொள்ள தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. திமுக தரப்பில் சிபிஎம்முக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு வார்டு மட்டும் ஒதுக்குவதாக கூறினாலும் இறுதியில் எந்த வார்டும் ஒதுக்கப்படவில்லை. திமுக தரப்பில் கூட்டணி தர்மத்தை மதிக்காத நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சிபிஎம் அறிவித்தது. இதன்படி இரண்டாவது வார்டில் பி.சுரேஸ், 8 ஆவது வார்டில் கே.மோகன், 9 ஆவது வார்டில் எஸ்.அந்தோணி, 11 ஆவது வார்டில் ஏ.கவிதா, 16 ஆவது வார்டில் எஸ்.ஏசுதாஸ், 20 ஆவது வார்டில் டி.அம்பிகா, 22 ஆவது வார்டில் பி.ராஜநாயகம், 26 ஆவது வார்டில் ஜே.பாஸ்கா மேரி, 50 ஆவது வார்டில் எஸ்.கே.பிரசாத் ஆகியோர் சிபிஎம் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். வியாழனன்று (பிப்.3) வேட்புமனு தாக்கல் செய்வார்கள். அர்ப்பணிப்போடு மக்களுக்காக பணியாற்றவும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை சமரசமின்றி நடத்தவும் சிபிஎம் வேட்பாளர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக்கொள்வதாக செல்லசுவாமி கூறினார்.