உசிலம்பட்டி, ஏப்.5- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும், மூக்கையாத் தேவரும் உழைக்கும் மக்களுக்காகப் போரா டிய இடதுசாரி தலைவர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக் கூர் இராமலிங்கம் கூறினார். ‘கல்வித் தந்தை’ மூக்கை யாத்தேவரின் 100-ஆவது பிறந்த நாள் விழா மதுரை மாவட்டம் உசி லம்பட்டி அருகே உள்ள பாப்பா பட்டியில் ஏப்ரல் 4 செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மதுக்கூர் இராம லிங்கம் பேசியதாவது:- மக்கள் மனங்களில் 100-ஆண்டு கள் கடந்த பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மூக்கையா தேவர். அவரது நூற்றாண்டு விழா அவர் பிறந்த கிராமமான பாப்பா பட்டியில் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை பெருங்காம நல்லூர் தியாகிகளுக்கு வீரவணக் கம் செலுத்தப்பட்டது. பெருங்காம நல்லூர் தியாகிகள் நடத்திய போராட் டம் இந்திய விடுதலைப் போராட் டத்தின் ஒரு பகுதி என்றால் அது மிகையல்ல. பெருங்காமநல்லூர் தியாகிகளில் ஒருவரான மாயக்கா ளின் பரம்பரை தான் மூக்கையா தேவர்.
இடதுசாரிகள்
பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், மூக்கையா தேவரும் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த வர்கள். அவர்கள் உழைக்கும் மக்க ளுக்காக போராடியவர்கள். உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்னும் அதி கமாக அரசுப் பள்ளிகள் திறக்க வேண்டும். கல்வி பெற்ற சமூக மாக இன்றைக்கு நாம் உயர்ந்தி ருக்கிறோம். கல்வியை வளர்ப்ப தில் மூக்கையாத்தேவர் பெரும் பங்காற்றியுள்ளார். வீரம் இருக்கி றது; மானம் இருக்கிறது. கல்வியும் சேர்ந்து கொண்டால் இவர்கள் வெல்ல முடியாதவர்களாக மாறு வார்கள் என்பதற்காகத் தான் கல்லூரி துவக்கினார் மூக்கையா தேவர். அன்றைக்கு குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து மக்கள் போரா டிய போது, கம்யூனிஸ்ட் இயக்கத் தின் மறைந்த தலைவர்கள் பி. ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, கே.பி. ஜானகியம்மாள் ஆகியோர் கிரா மம் கிராமமாகச் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராகப் போராடி யுள்ளனர்.
ஆதி நிலம்
70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் னால் ஆப்பிரிக்காவில் தான் மனித இனம் தோன்றியதாகக் கூறப்படு கிறது. உசிலம்பட்டி தாலுகா ஜோதி மாணிக்கத்தைச் சேர்ந்த விரு மாண்டி என்ற இளைஞரின் இரத்த மாதிரியை ஆய்விற்காக எடுத்துச் சென்று மரபணுச் சோதனை செய்த போது, முடிவு ஆதி மனிதனின் மர பணுவும், உசிலம்பட்டி விருமாண்டி யின் மரபணுவும் ஒரே மாதிரி இருந் தது என்பதை தெளிவானது. தமிழ கம் உலகத்தின் ஆதி நிலம் என்ப தற்கு இது சாட்சியாக உள்ளது. அரசியலில் எளிமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றை மீட்டெடுக்கும் பணியில் இடதுசாரி இயக்கம் என்ற முறை யில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியோடு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இணைந்து நிற்கிறது; நிற்போம். இவ்வாறு அவர் பேசினார். மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவிற்கு அகில இந்திய பார் வர்டு பிளாக் தலைவர் பி. வி.கதி ரவன் தலைமை வகித்தார். எல்.எஸ். இளங்கோவன், ரெட் காசி, பி. செந்தில்குமார், பி.ரவி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். திமுக சார்பில்.வணிகவரி மற் றும் பத்திரப் பதிவுத் துறை அமைச் சர் பெ.மூர்த்தி, நாடாளுமன்ற முன் னாள் உறுப்பினர் தங்க.தமிழ்ச் செல்வன், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் காங்கிரஸ் கார்த்திகேயன், சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பி னர் பா.காளிதாஸ், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், செல்லம் பட்டி ஒன்றியச் செயலாளர். வி.பி.முருகன், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணி மாறன், உசிலம்பட்டி சிவா, சீம னூத்து ஊராட்சித் தலைவர் அஜித் பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.