விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் ஜெய்ந்த் நகர் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், சிறப்பு அனுமதி பெற்று, நடமாடும் நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், துணைப் பதிவாளர் வீரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.