districts

img

தூய்மைப் பணியாளர்களுக்கு நிலுவை தொகை முறையாக வழங்குக!

இராமநாதபுரம், மே 16- ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு நிலுவை தொகை முறையாக வழங்க கோரி சிஐடியு உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அய்யாத்துரை, நிர்வா கிகள் கணேசமூர்த்தி, பிரான்சிஸ், மகா லிங்கம், கண்ணன், கலைச்செல்வன், முருக வேல் ஆகியோர் பேசினர். இதில், 300 பெண்  கள் உட்பட 500 பேர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தில் கிராம ஊராட்சிகளில் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்  மைப் பணியாளர்களுக்கு ஏழாவது ஊதி யக்குழு நிலுவை தொகை முறையாக வழங்க  வேண்டும். ஓஎச்டி ஆப்ரேட்டர்கள் துப்புர வுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு அரசு அறிவித்துள்ள சம்பள உயர்வை வழங்க மறுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மீது மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.