districts

img

நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், மார்ச்.18- தொண்டியில் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து நாட்டுப்படகு மீன வர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டிக் கொண்டு கடலில் படகுகளோடு வந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள நாட்டுப்படகு மீன வர்களின் படகுகளை மீட்பதற்கான நடவ டிக்கை எடுக்க வேண்டும், 1983 கடற்கரை  மேலாண்மை ஒழுங்குமுறைச் சட்டத்தை  உறுதியாக அமல்படுத்த வேண்டும், சட்ட விரோத மீன்பிடிப்பில் ஈடுபடக்கூடிய விசைப் படகுகளின் உரிமம் ரத்து செய்யப்படுவ தோடு, படகுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணா மூர்த்தி தலைமை வகித்தார். மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, கடல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.கணேசன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்ஏ..சந்தானம், மாவட்டத் துணைச் செயலாளர் கே.அருள்ராஜ், நம்பு தாளை ஊராட்சி மன்றத் தலைவர் கே. ஆறுமுகம், கிராமத் தலைவர் கிருஷ்ணன், கடல் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் காளிமுத்து, நாராயணன், கே.கருப்பையா உட்பட 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.