districts

புஞ்சை புளியம்பட்டியில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

ஈரோடு,டிச.2- ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் கால்நடை விற்பனை சந்தை உள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறும்.  கால்நடைச்சந்தைக்கு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட  கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விவ சாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.  கடந்த வாரங்களில் விற்பனை மந்தமானது.இந்நிலை யில் கால்நடைகள் சுமார் 2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.இதனால்  வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.