வன உரிமைச் சட்டத்திற்கு புறம்பாக கால்நடைகள் வனப்பகுதியில் மேய்க்க விதித்த உயர்நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்தும் மேல்முறையீடு செய்யக்கோரியும் புதனன்று பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.பி. இளங்கோவன், தேனி மாவட்டச் செயலாளர் கண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன், இளஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.