districts

img

ஜாக்டோ -ஜியோ சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரதம்

தேனி, மார்ச் 5- தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்  டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ திய திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சொன்னபடி முதல்வர் அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடு அக விலைப்படி நிலுவைத் தொகை ,ஈட்டிய விடுப்பு சரண் உள்ளிட்ட சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும் .தொகுப்பூ தியம் மதிப்பூதியம் அறவே ஒழித்து அனைவருக்கும் காலமுறை ஊதியம்  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ  சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் மார்ச் 5 அன்று நடைபெற்றது. தேனி பங்களாமேட்டில்  உண்ணா விரத போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் ச.தாஜுதீன், சி.பவானி  (அரசு ஊழியர் சங்கம் ), ச.செல்லத் துரை(ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), வ.செல்வம் (அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் -அலு வலர்), எம்.காதர் முகமது மஸ்தான் (நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் ),த.ராஜ வேல் (தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்  றம்) ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை ஆதரித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.துரைராஜ் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் நிறைவு செய்து பேசி னார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் பேயத்தேவன் உள்ளிட்ட பல்வேறு  சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் துவங்கி வைத்து பேசினார். ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி   விளக்கிப் பேசினார். அரசு ஊழியர்  சங்க மாவட்ட செயலாளர் பி.சேகர் நிறைவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எம் சிவாஜி உட்பட  பலர் ஆதரித்துப் பேசினர்.

விருதுநகர் 

விருதுநகர் தேசபந்து மைதா னத்தில் நடைபெற்ற இப்போராட்டத் திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கா.கருப்பையா, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வை.ச. வைரமுத்து, முதுநிலை பட்டதாரி ஆசி ரியர் கழகத்தின் பெத்தையா, உடற்  கல்வி ஆசிரியர் சங்கத்தின் பிச்சை,  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவின் ஜெ.காந்திராஜ் நிறைவுரையாற்றினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் 

திண்டுக்கல்லில்  போராட்டத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.பி. முருகையா துவக்கி வைத்து பேசி னார். ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் பீட்டர் ஜேம்ஸ், அந்தோணி தாஸ், ராஜா கிளி, ஜோசப் சேவியர் ,முபாரக் அலி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்ட மைப்பின் மாநில பொதுச் செயலாளர் நிறைவுரையாற்றினார்.

சிவகங்கை 

சிவகங்கை அரண்மனைவாசல் முன்பாக நடைபெற்ற  போராட்டத் திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், இராதாகிருஷ்ணன், மகேஸ்வரன், நாகராஜ், ராம்குமார் ஆகியோர் தலைமை  வகித்தனர்.  மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் நிறைவுரையாற்றினார்.