districts

img

கே.நவாஸ் கனி எம்.பி.யிடம் எல்.ஐ.சி பென்சனர்கள் கோரிக்கை மனு

இராமநாதபுரம்,ஜூன் 18- ஒன்றிய, மாநில அரசுத் துறைகள் மற்றும்  பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கிகளில் இருப்பது போன்று எல்ஐசிஐயிலும் குடும்ப பென்சன் 30 சதவீதம் வழங்க வேண்டும் என்று பென்ஷனர்கள் கோரிக்கையை ஏற்று எல்ஐசி நிர்வாகம் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு ஒப்புதல் அளித்து, ஒன்றிய நிதி அமைச்சகத்திற்கு அனு மதிக்காக கோப்பை அனுப்பி வைத்தது .ஆனால் ஒன்றிய நிதியமைச்சகம் அதில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வரு கிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கு இதுகுறித்து கோரிக்கை கடி தம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டு  இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  கே.நவாஸ் கனியிடம் எல்.ஐ.சி பென்சனர்  சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இதில் எல்ஐசி பென்சனர் சங்கம் சார்பாக எம். பாஸ்கரன், எஸ் .பாஸ்கரன், கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி, வெங்க டேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.