தேனி, ஏப்.5- விலைவாசி உயர்வு, பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டும் ,விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள், விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள் இணைந்து தில்லியில் ஏப்ரல் 5 புதன்கிழமையன்று நடைபெற்ற பேரணியை ஆதரித்து பெரிய குளத்தில் எல்ஐசி அலுவலகம் முன்பு காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் ஷீலா தேவி தலைமை வகித்தார். கிளை செயலாளர் அகமது ஆதம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பிரேம்குமார் உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.