தூத்துக்குடி,ஜன. 13 உடன்குடியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிறிஸ் டியாநகரம் டி.டி.டி.ஏ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் புதனன்று தொடங்கி வைத்து நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, தூத்துக்குடி சுகா தார பணிகள் துணை இயக்குநர் பொற்செவ் வன், உடன்குடி வட்டார மருத்துவ அலுவ லர் அனிபிரிமின், உடன்குடி ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் பாலசிங், தி.மு.க. மாணவ ரணி மாநில துணை செயலாளர் உமரி சங்கர், முக்கிய பிரமுகர் ராமஜெயம், உடன்குடி வட்டார சுகாதார மேற்பார்வையா ளர் சேதுகுத்தாலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.