மதுரை, ஜூலை 4- இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் இராணு வத்தில் ஒப்பந்தப் பணி என்ற பெய ரில் நாட்டின் பாதுகாப்பை சீர் குலைக்கும் “அக்னிபாத்” திட்டத் தைக் கைவிட வேண்டும் என பாஜக அரசை வலியுறுத்தி இடதுசாரி இளை ஞர்கள்- மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் திங்களன்று மதுரை ஆட்சி யர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். வேல்தேவா, ஏஐஎப்டி மாநிலப் பொறுப்பாளர் சிவா பாண்டி, வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் டி. செல்வராஜ், மாணவர் சங்க மாநில நிர்வாகி கண்ணன், ஏஐடிஓய்ஓ ஒருங்கிணைப்பாளர் அருள் பாண்டி யன், மாவட்டச் செயலாளர் செல்வி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி.கோபிநாத், பொருளாளர் அ. பாவேல் சிந்தன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் க.பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தை மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் வாழ்த்திப் பேசினார்.