திண்டுக்கல், மே 26- ஒன்றிய பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையின் விளை வாக பெட்ரோல் டீசல், சமையல் எரி வாயு விலை உயர்வைக் கண்டித்து இடதுசாரிக்கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் சார்பில் மே 26 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட் டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் தலைமை வகித்தார். சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் என்.பாண்டி, சிபிஐ மாவட்டச்செயலாளர் ஏ.பி.மணிகண் டன், வி.சி.க. கிழக்கு மாவட்டச்செய லாளர் ரோக்கஸ்வளவன், சிபிஐ (எம்எல் விடுதலை) அமைப்பின் மாவட்டச்செய லாளர் பொன்னுதுரை, ஆகியோர் பேசினர்.
சிவகங்கை
சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், சிபிஐ மாவட்ட செயலாளர் கண்ணகி, விசிக பொறுப்பாளர் சுடர்மணி ஆகி யோர் பேசினர்.