தோழர் ராம்கி மரணம் தலைவர்கள் அஞ்சலி
மதுரை, ஜூன் 11- மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தின் முன்னாள் இணைச் செயலாளரும், காப்பீட்டு ஊழி யர் மாத இதழ் துணையாசிரியருமான ஆர். ராம கிருஷ்ணன் (ராம்கி) ஞாயிறன்று காலமானர். அவ ருக்கு வயது 57. ராமகிருஷ்ணன் (எ) ராம்கி மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.வசந்தன், ஜா. நரசிம்மன், அ.கோவிந்தராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராதா , தெற்குப் பகு திக்குழுச் செயலாளர் ஜெ.லெனின் சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், செயலாளர் இரா. லெனின், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மதுரை மண்டலத் தலைவர் பிரபு, செயலாளர் பாண்டியராஜன், துணைத் தலைவர் புஷ்பராஜன் மற்றும் நிர்வாகிகள், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தென் மண்டல முன்னாள் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், மதுரை மண்டல தலை வர் என்.சுரேஷ்குமார், பொதுச்செயலாளர் என்.பி. ரமேஷ் கண்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே. சாமு வேல்ராஜ், அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறு வோர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவர் சந்திரசேகர பாரதி ஆகியோர் ராமகிருஷ்ணன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்கள் அன்று அவரது இல்லத்தில் நடை பெற்றது. மறைந்த ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர், மறைந்த கே.ஆர்.சங்கரனின் மருமகன் ஆவார்.
நீர்வரத்துப் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற கிராமத்தினர் வலியுறுத்தல்
விருதுநகர், ஜூன் 12- விருதுநகர் அருகே உள்ள சின்ன வள்ளிக்குளம் கிரா மத்தில் நீர்வரத்துப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புளை அகற்ற வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் அருகே உள்ளது சின்னவள்ளிக்குளம் கிராமம். மழைக்காலத்ல் இங்குள்ள் ககண்மாய் நிரம்பி பின்பு, கலுங்கு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு, பாலவநத்தம் கண்மாயை அடையும். இந்நிலையில் நீர்வரத்து ஓடை பெரும் பகுதி தூர் வாரப்பட்டுள்ளது. சிறிது பகுதியில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், அப்பணி முடங்கி உள்ளது. எனவே, நில அளவை செய்து தூர்வாரும் பணி யை செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பாட்டிலுக்குள் கஞ்சாவை மறைத்து சிறைக்குக் கொண்டு வந்த பெண்
விருதுநகர், ஜூன் 12- விருதுநகரில் சிறைக் கைதிக்கு வழங்க தேங்காய் எண்ணெய் பாட்டிலுக்குள் கஞ்சாவை மறைத்து வைத்து கொண்டு வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகரில் உள்ள கிளைச் சிறையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 29 வயது வாலிபர் விசா ரணை கைதியாக உள்ளார். அவரை பார்க்க திங்களன்று காலை சிறைக்கு அவரது தாயார் ரெஜினா மேரி வந்துள் ளார். பின்பு, தனது மகனுக்கு சில பொருட்களை வழங்க வேண்டுமென சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அப்பொருட்களை சிறையில் இருந்து காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, தேங் காய் எண்ணெய் பாட்டிலில் உள்ளே நூதன முறையில் சுமார் 20 கிராம் அளவுக்கு கஞ்சாவை மறைத்து வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து துணை சிறை அலுவலர் ரமாபிரபா விருதுநகர் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர், கஞ்சாவை சிறைக் கைதிக்கு கொண்டு வந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்கா கடத்தியவர்கள் கைது
திருவில்லிபுத்தூர், ஜூன் 12- திருப்பூர் மாவட்டம் தொங்குசெட்டிபாளையத்தைச் சேர்ந்த மணிவண்ணன்(47). இவர் தேனி மாவட்டம் சின்ன மனூரைச் சேர்ந்த சத்யராஜ், தம்பிபட்டி பகுதியைச் சேர்ந்த முஹமது ஆதாம் (25) ஆகிய மூன்று பேரும் தடை செய்யப்பட்ட ரூ.47 கிலோ குட்காவை இரு சக்கர வாக னத்தில் கடத்திச் சென்றனர். இவர்களை திருவில்லி புத்தூர்-அழகாபுரி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்து அவர்களி டமிருந்து ரூ.1.03 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் சிறையில் கைதிகள் மோதல் 27 பேர் வெளியூருக்கு மாற்றம்
விருதுநகர், ஜூன் 12- விருதுநகர் மாவட்டச் சிறையில் கைதிகள் திடீரென மோதிக் கொண்டனர். இதனால், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருந்த கைதிகள் வெளியூர்களில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். விருதுநகர்-மதுரை சாலையில் விருதுநகர் மாவட்ட சிறை உள்ளது. இங்குள்ள பத்து அறைகளில் 160 கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி உள்ளது, ஆனால் அளவுக்கு அதிகமாக 255 கைதி கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் உணவு, குடிநீர், அறைகளில் இட நெருக்கடி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும், கைதிகளுக்குள் அடிக்கடி தகராறு நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திங்களன்று காலை, கொலை வழக்கில் தொடர்பு டைய ஒரு கைதிக்கும் மற்றொரு கைதிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உதவிச் சிறை அலுவலர் தலைமையிலான காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலை யில், சிறையில் ஒருதரப்பை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பை ஒதுக்கவும் செய்வதாகவும் கூறி கைதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம். இதையடுத்து பாதுகாப்புக் கார ணங்களுக்காக 25 கைதிகளை மதுரை மத்திய சிறைக்கும் மேலும் இரு வரை திருச்சிராப்பள்ளி சிறைக்கும் மாற்ற காவல்துறை உயரதி காரிகள் உத்தரவிட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பும் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா
மதுரை, ஜூன் 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பும் பாஜக மாநிலச் செயலா ளர் எஸ்.ஜி.சூர்யா மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு அளிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் மா. கணே சன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர் பி. ராதா, பகுதிக்குழுச் செயலாளர் ஏ. பாலு ஆகியோர் மதுரை மாநகர் காவல்துறை ஆணையாளரிடம் மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- “பாரதீய ஜனதா கட்சியின் மாநிலச் செய லாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் கவுன்சில ரால்-தூய்மைப் பணியாளரின் உயிர் பறி போனது என்றும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்” என்ற பொய்ச் செய்தி யை தனது டுவிட்டர் மற்றும் சமூக வலை தளங்களில் பதிவிட்டுப் பரப்பி வருகிறார். இந்தச் செய்தியை நானும் எங்களது கட்சி தோழர்கள் பலரும் ஜூன் 10-ஆம் தேதி பார்தோம். அந்தச் செய்தியில், “மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-ஆவது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரைக் கட்டாயப் படுத்தி வேலை செய்யச் சொல்லியுள்ளார். அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்து விட்டதாகவும். சம்பந்தப்பட்ட தொழிலாளி பட்டியலினத்தைச் சார்ந்தவர் எனவும் பதி விட்டுள்ளார். இதனால் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பதற்றமும். அச்சமும் ஏற்பட்டுள்ளது. மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூ ராட்சியே கிடையாது. விஸ்வநாத் என்ற கவுன்சிலரும் கிடையாது. அப்படி எந்த வொரு சம்பவமும் நடைபெறாத போது சமூக பதற்றத்தை ஏற்படுத்தி சாதி மோதலை தூண்டும் விதமாக உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். எஸ்.ஜி.சூர்யா. இப்படி தவறான செய்திகளைப் பரப்புவதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மீதும் அவதூறுகளைப் பரப்பி வரும் சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண் டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய் வழக்குகளை திரும்பப்பெற கே.சாமுவேல்ராஜ் வலியுறுத்தில
மதுரை, ஜூன் 12- மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பத்மநாபன் ஆகி யோர் உண்மைக்குப் புறம்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று மாலை தே.கல்லுப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந் திரன் தலைமை வகித்தார். மாநிலச்செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செ.முத்துராணி, ஆகி யோர் பேசினர். மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த கட்சி உறுப்பினர்கள், மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டிச் செயலாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், “ மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை காவல்துறை ஒரு மாதத்தில் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி னார்”.
தொடக்ககல்வி பட்டயத்தேர்வு இணையதளம் மூலம் அனுமதிச் சீட்டு
ஒட்டன்சத்திரம், ஜூன் 13- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் (பொறுப்பு) வீ.இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற உள்ள 2023-ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை தொடக்ககல்வி பட்டயத்தேர்வின் முதலாமாண்டு தேர்வுகள் வருகின்ற 23.6.2023 முதல் 12.7.2023 வரையிலும், இரண்டாமாண்டு தேர்வுகள் 22.6.2023 முதல் 11.7.2023 வரையிலும் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் (தட்கலில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட) www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக நேற்று முதல் (12.6.2023 பிற்பகல் முதல்) தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்ததேதி விவரங்களை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் அவர் கூறி யுள்ளார்.
செந்துறை: பள்ளி முன்பு முறிந்து விழுந்த மின்கம்பம் மின்வாரியம் அலட்சியம்
நத்தம், ஜூன் 13- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மலைவிநாயகம்பட்டியில் அரசுத் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பகுதியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பள்ளி முன்பு இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் பள்ளிக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பத்து நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் அகற்றபடாமலும், சீரமைக்கப்படாமலும் உள்ளது. நாளை மறுநாள் (புதன்கிழமை) 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறக்கப்படவுள்ளது. பள்ளி முன்பு அகற்றப்படா மல் உள்ள மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளால் மாண வர்களுக்கு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நட வடிக்கை எடுக்குமா மின்வாரியம்.
செவிலியர்களுக்கு பயிற்சி
திருவில்லிபுத்தூர், ஜூன் 12- திருவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள தியாக ராசர் மேல்நிலைப்பள்ளியில் ரெட்டியபட்டி வட்டார மருத்துவ மையத்தின் கீழ் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியக்கூடிய சமுதாய செவிலியர் அனைத்துப் பகுதி சுகாதார செவிலியர்கள் அனைத்து கிராம சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவர் கருணா கரபிரபு பயிற்சியளித்தார். முகாமில், “ ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தை களுக்கு வயிற்றுப் போக்கு உள்ளதா கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உப்புக் கரைசல் எப்படி தயாரித்து கொடுக்க வேண்டும். ஜின்க் மாத்திரை எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமை வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் ஜெயச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் கணேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
தாட்கோ மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மானியம்
விருதுநகர், ஜூன் 12- விருதுநகரில் தாட்கோ மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.17.67 லட்சம் மதிப்பிலான மானிய உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை யில் நடைபெற்றது. இதில், மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை மூலம் இலவச தையல் இயந்திரங்களை ஆட்சி யர் வழங்கினார். தாட்கோ அலுவலகம் மூலம் 11 பய னாளிகளுக்கு டிராக்டர், லோடு வாகனம் வாங்குதல், ஆடு வளர்ப்பு உள்ளிட்ட தொழில் புரிவதற்காக மொத்தம் ரூ.17.67 லட்சம் மதிப்பிலான மானியத்தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தற்காலிக தக்கார்
மதுரை, ஜூன் 11- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தற்காலிக தக்கா ராகவும் இணை ஆணையராகவும் கிருஷ்ணன் திங்க ளன்று பொறுப்பேற்றுக்கொண்டார். கோவில் தக்கா ராக இருந்த கரு.முத்து கண்ணன் மே 23-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து தற்லிக தக்காராக கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நத்தம் சிறுமலையில் பலாப்பழம் விற்பனை ஜோர்
நத்தம், ஜூன் 11- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுமலை யில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மலைப் பகுதி விவசாயிகள் வசிக்கின்றனர். இங்கு பலா, வாழை, மிளகு, காபி, எலுமிச்சை, சவ்சவ், பல்வேறு காய்கறிகள் விளை விக்கப்படுகிறது. இருப்பினும் சிறுமலை யின் சிறப்பு வாழையும், பலாவும் தான். இங்கு விளையும் பலாப்பழங்கள் சிறு மலை அடிவாரம், திண்டுக்கல் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு ஊர் களுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்ற னர். சித்திரை மாதத்தின் கடைசியில் தொடங்கி ஆடி மாதம் வரை பலாப்பழ சீசன் இருக்கும். அதிக சுவையுடனும், நார்சத்து கொண்டதாகவும், மருத்துவ குணம் மிக்க தாகவும் இருப்பதால் பொதுமக்கள் அதி கம் விரும்புகின்றனர். பலாப்பழங்கள் ரூ.75 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படு கிறது.
அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் விருதுநகர் மாவட்ட மாநாடு
விருதுநகர், ஜூன் 12- ஒன்றிய பாஜக அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். தொழிலாளர் விரோதச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப் பின் விருதுநகர் மாவட்ட மாநாடு நடைபெற்றது, எல்.பி.எப் தலைவர் ஆர். ராஜசெல்வம் தலைமை வகித்தார். கவுன்சில் செய லாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி துவக்கி வைத்துப் பேசி னார். சிஐடியு மாவட்ட செய லாளர் பி.என்.தேவா, ஏஐடி யுசி மாவட்டத் தலைவர் சமுத்திரம், செயலாளர் ஆர். பி.முத்துமாரி, எம்எல்எப் மாநிலத்துணைத் தலைவர் மகபூப் ஜான் ஆகியோர் மாநாட்டின் நோக்கம் குறித்துப் பேசினர் மாநாட்டில் ஐஎனடியுசி மாநிலப் பொருளாளர் பிரபா கரன், மாவட்டச் செயலாளர் கண்ணன், தொழிலாளர் விடு தலை முன்னணி சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.