districts

மதுரை முக்கிய செய்திகள்

தாமதமாக புறப்படும்  இராமேஸ்வரம் - மதுரை ரயில்

மதுரை, ஜூலை 7-  மானாமதுரை - சூடியூர் ரயில் நிலையங்கள் இடையே  காலை 10.15 மணிமுதல் மதியம் 01.45 மணி வரை ரயில்  பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் (06652) ஜூலை 7  முதல் ஜூலை 31 வரை ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை கள் தவிர இராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 12.20 மணிக்கு 80 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

காங்கிரஸ் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்

விருதுநகர், ஜூலை 7- விருதுநகரில் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். விருதுநகர், அஹமது நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி (42). 8 வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக உள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இந்நிலையில், அஹ மது நகர் பகுதியில் கடந்த மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, அங்கிருந்த மண்ணெண்ணெய் செல்வம் என்பவரின் கடை அகற் றப்பட்டது. இதையடுத்து, செல்வத்தின் மகன் சங்கர், கவுன்சிலர் பால்பாண்டியைப் பார்த்து, அநாகரீகமாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம். எனவே,  பால்பாண்டி, மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கரைத் தேடி வருகின்றனர்.

பயிர்க்கடன் கூட்டுறவு அமைப்புகளுக்கு  சென்னை பதிவாளர் உத்தரவு 

சிவகங்கை, ஜூலை 7- பயிர்க்கடன் வழங்குவது தொடர்பாக கூட்டுறவு துறை சென்னை பதிவாளர் அனைத்து கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுக்கு உத்திரவு பிறப்பித்துள்  ளார்.  அவர் அனுப்பிய உத்தரவில், .உழவர் கடன் அட்டை தாரர்கள் திட்டத்தில் பயிர்க்கடன் வழங்கும் நடைமுறை கள் எளிமைப்படுத்த மாநிலம் முழுவதும் கடன் வழங்கு வதில் ஒரே நடைமுறையை பின்பற்றவும் பயிர்க்கடன் வழங்கும்போது பயிரிடப்பட்டுள்ள விவசாயமும் வரு வாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் தகவலும் வேறாக உள்ளது. அதனால் கடன் அனுமதி பயிர்க்கடன் தொகையை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்த 3மாதங்களுக்குள் நிலத்தின் நிழற்பட தேதியோடு சங்கத்தில் வழங்கி பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

பூட்டிய வீட்டில்  நகை, பணம் திருட்டு

சிவகாசி, ஜூலை 7- சிவகாசி ஆயில் மில் காலனியைச் சேர்ந்தவர் பஞ்சர்ணம்(40). இவர் வீட்டைப் பூட்டிச் சாவியை ஜன்ன லில் வைத்து விட்டு, வேலைக்கு சென்றுள்ளார். திரும்பி  வந்து பார்த்த போது, வீடு திறந்தநிலையில் இருந்துள்  ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று  பார்த்த போது, பீரோவில் இருந்த தங்க மோதிரங்கள், கம்மல் மற்றும் ரூ.15ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இதையடுத்து, பஞ்சவர்ணம், சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

நத்தம் அருகே  போக்சோவில் ஒருவர் கைது

நத்தம், ஜூலை 7- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரெட்டியபட்டி கிராமம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (23). ஆட்டோ ஓட்டுநரான இவர் லிங்கவாடி பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் நத்தம் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் சுரேசை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

விருதுநகர் அருகே 163 கிலோ புகையிலை பறிமுதல்: 5 பேர் கைது

விருதுநகர், ஜூலை 7- விருதுநகர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 163 கிலோ புகையிலை பொருட்கனை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கண வன், மனைவி உட்பட 5 பேரை கைது செய்தனர். விருதுநகர் அருகே ராமசாமிபுரம் புதுப்பட்டியில் ஜேசுராஜ் என்பவருக்கு சொந்தமான குடோனில் புகை யிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சூலக்கரை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார் குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு, 163 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் ஆகும். பின்பு, அவற்றை பறிமுதல்  செய்த போலீசார், ஜேசுராஜிடம் விசாரணை நடத்தி னர்.  அதில், அவர் விநியோகம் செய்திருந்த விருதுநகர் அல்லம்பட்டி ராமன் தெருவைச் சேர்ந்த கமலக்கண்ணன், மீசலூர் நடுத் தெருவைச் சேர்ந்த வடிவேலு, சூலக்கரை யைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் மற்றும் அவரது மனைவி கணேஷ்வரி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

விருதுநகர், ஜூலை 7- விருதுநகர் அருகே உள்ள தடங்கம் கிராமத்தைச் சேர்ந்த போத்தையன் மகன் மணிகண்டன். இவர், சமீபத்தில் அங்கு நடைபெற்ற இரட்டைக் கொலையில் தொடர்புடையவர்.  இவர், தொடர்ந்து அங்கு பொது அமைதியை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டாராம். எனவே, அவரை  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.  அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

போடி அருகே தீயில் கருகி தாய்,  மகள் மரணம்: காவல்துறையினர் விசாரணை

தேனி, ஜூலை 7- போடி அருகே வியாழக்கிழமை, தீயில்  கருகி தாய், மகள் இறந்து போனது குறித்து  போடி தாலுகா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தெற்கு ராஜ வீதியில் வசிப்பவர் நல்லுச்சாமி மனைவி முத்துலட்சுமி என்ற சோபனா (28). இவருக்கு திருமணமாகி 9 வருடம் ஆன  நிலையில் ஹேமஸ்ரீ (8) என்ற மகள் உள்ளார். வியாழன் கிழமை காலை நல்லுச்சாமி வெளி யில் சென்ற நிலையில் அவரது வீட்டிலி ருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. பக்கத்து  வீட்டினர் சென்று பார்த்தபோது முத்து லட்சுமியும், ஹேமஸ்ரீயும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்துள்ளனர். இருவரையும் மீட்டு போடி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றதில் ஹேமஸ்ரீ  இறந்து போனது தெரிந்தது. உயிருக்கு போராடிய முத்துலட்சுமியை தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு  சென்றதில் வியாழன் மாலை அவரும் இறந்து போனார். காவல்துறையினர் நடத்திய விசாரணை யில் நல்லுச்சாமி பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்ததும், போதிய வருமானம் இல் லாததால் முத்துலட்சுமி போடியில் உள்ள தனியார் பிரிண்டிங் பிரசுக்கு வேலைக்கு சென்றதும் தெரியவந்துள்ளது. போதிய வருமானம் இல்லாததால் முத்துலட்சுமி குழந்தையுடன் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

விவசாயிகள் சங்க  கிளைகள் அமைப்பு

 சிவகங்கை, ஜூலை 7- சிவகங்கை மாவட்டம், காளைகோவில் தாலுகாவில் நல்லையேந்தல் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளை தலை வராக கருப்பு, செயலாளராக ராஜ் தேர்வு செய்யப்பட்ட னர். இளந்தகரை ஊராட்சி விளாங்காட்டூர் கிராமத்தில்  புதிய கிளை அமைக்கப்பட்டது. இதில் கிளை தலைவராக  முருகேசன், செயலாளராக தனபால், பொருளாளராக செபஸ்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனார். பளுர் கிராமத்தில் புதிய கிளை தலைவராக முத்துராமன், செய லாளராக கணபதி, பொருளாராக தர்மராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். எரிவயல் ஊராட்சி காட்சிரம் கிராம கிளை தலைவராக நாகசுந்தரம், செயலாளராக ராஜலட்சுமி, பொருளாராக வேலுச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனார். இதில் ஒன்றியச் செயலாளர் சாத்தப்பன் கலந்து கொண்டு பேசினார்.

ஊட்டச்சத்து தொகுப்பு  பெட்டகம் வழங்கல் 

தேனி, ஜூலை 7- தேனி அருகே வீரபாண்டியில் சிறுமியை திருமணம் செய்த சிறுவனை கைது செய்து சிறார் சிறையில் அடைத்த னர். தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்த 17 வயது வாலிப ரும், 15 வயது சிறுமியும் உறவினர்கள் என்பதால் அவர் களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர், சிறுமியை ஆசை  வார்த்தை கூறி திருமணம் செய்துகொண்டார். இதற்கு வாலிபரின் தந்தை, தாய் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.  இது குறித்து அறிந்த சிறுமியின் தாய், வீரபாண்டி காவல் நிலையத்தில்  நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் 17 வயது சிறுவன்  மீது  வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறார் சிறையில் அடைத்த னர். மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த னர்.

வேலை வாங்கித் தருவதாக ஆன்லைனில்  பணமோசடி

தேனி, ஜூலை.7- வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் ஆன்லைனில் பண மோசடி செய்தது தொடர்பாக தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு  பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . தேனி பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த அசோக்  என்பவரின் மகள் ரம்யா துளசி(22). கடந்த ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் வேலைக்காக இணையத்தில் பதிவு செய்து வைத்தி ருந்தார். கடந்த பிப்ரவரி 3-ம் தேதி இவருக்கு மொபைலில் அழைப்பு வந்துள்ளது. இதில் தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய நபர்  மெயிலில் பதிவு  லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கல்வி சான்றி தழ்களையும் பரிவர்த்தனை கட்டணமாக ரூ.ஆயிரத்து 982 அனுப்பவும் கேட்டுள்ளார். இப்பணத்தை அனுப்பியதும் பணம் வரவாகவில்லை. எனவே மீண்டும் அனுப்ப கூறியுள்ளார். இதை நம்பி  ரம்யதுளசி மீண்டும் பணம் அனுப்பியுள்ளார். பின்பு  ஒவ்வொரு காரணங்களாக கூறி மொத்தம் ரூ.14ஆயி ரத்து 964 பணம் பெற்றுள்ளனர். ஆனால் வேலை தராமல் தொடர்ந்து பணம் கேட்டதால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் ரங்கநாயகி விசா ரித்து வருகிறார்.

மேலாளர் மர்ம மரணம் தனியார் விடுதியில் காவல்துறை தீவிர விசாரணை

மதுரை, ஜூலை 7- மதுரை ரயில் நிலையம் எதிரேயுள்ள டவுண்ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்குவிடுதியில் விருது நகர் மாவட்டம் பாலவநத்தம் பகுதியை சேர்ந்த  தர்மராஜ் (50) என்பவர் 15ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்துவந்தார்.  இந்நிலையில் வியாழனன்று  காலை விடுதியில் இருந்த அறை ஒன்றில் மேலாளர் தர்மராஜ் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பணியாளர்கள் திடீர்நகர் காவல்துறை யினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் விசா ரணை நடத்தினர். தர்மராஜ் உயிரிழந்த நிலையில் அவர் கையில் அணிந்திருந்த மோதிரம், மற்றும் கழுத்தில் அணிந்தி ருந்த செயின் ஆகிய தங்க நகைகள் காணாமல் போயி ருந்துள்ளது. இதன் காரணமாக உடல்நலக்குறைவால் உயிரி ழந்தாரா ? நகைக்காக கொலை செய்யப்பட்டார என்பது குறித்து அருகிலுள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

மயிலாடும்பாறை அருகே இரவு பகலாக மது விற்பனை

கடமலைக்குண்டு, ஜூலை.7- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயி லாடும்பாறை, உள்ளிட்ட கிராமங்களில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரு கிறது.  தற்போது காளை 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடை கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலை யில் சிலர் டாஸ்மா கடைகளில் மொத்தமாக  மது பாட்டில்களை வாங்கி அதனை பதுக்கி வைத்து கிராமங்களில் கூடுதல்  விலைக்கு விற்பனை செய்து வருகின்ற னர்.  குறிப்பாக மூலக்கடை, மந்திச்சுனை உள்ளிட்ட கிராமங்களில் டாஸ்மாக் கடை கள் அடைக்கப்பட்டது முதல் மீண்டும் திறக்கப்படுவது வரை மது பாட்டில் விற்பனை நடைபெறுகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் மது பாட் டில்கள் டாஸ்மாக்கில் விற்கப்படும் விலை யை விட 100 ரூபாய் அதிகம் வைத்து  விற்பனை செய்யப்படுகிறது. மதுப்பிரி யர்களும் வேறுவழியின்றி கூடுதல் விலைக்கு. மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.  இதேபோல காலையில் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு திரும்பும்போது கூலி தொழிலாளர்களும் கூடுதல் விலைக்கு விற்கப்படும் மது பாட்டில்களை வாங்கி பயன்படுத்தி வரு கின்றனர்.  போலீசாரும் பெயரளவில் அவ்வப்போது ரோந்து பணி மேற்கொண்டு மது பாட்டில்கள் விற்பவர்களை கைது  செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் அதிகாரிகள் கடமலை-மயிலை ஒன்றி யத்தில் மது விற்பனையை முற்றிலுமாக  தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனிநபர்களுக்கு மொத்தமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ய கூடாது என டாஸ்மாக் கடைக ளுக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக  ஆர்வலர்களும் பொதுமக்களும் வலி யுறுத்துகின்றனர்.

நாளை மதுரை மாவட்டத்தில்  19 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்

ஆட்சியர் அறிவிப்பு

மதுரை, ஜூலை  7- மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள  ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் 19 இடங்க ளுக்கு ஜூலை 9-இல் தோதல் நடைபெற உள்ளது என்று மதுரை ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினா், கிராம ஊராட்சித் தலை வர் மற்றும் 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பி னர் பதவிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு ஜூலை 9ஆம் தேதி தோதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய  வார்டு எண் 1, சேடப்பட்டி ஊராட்சி ஒன்றி யத்துக்குள்பட்ட அத்திப்பட்டி கிராம ஊராட்சித் தலைவர் பதவி, மதுரை கிழக்கு ஊராட்சி அயிலாங்குடி ஊராட்சி வார்டு 4, சக்கிமங்கலம் ஊராட்சி வார்டு 7, மதுரை மேற்கு ஒன்றியம் மாலைப்பட்டி ஊராட்சி வார்டு 1, திருப்பரங்குன்றம் ஒன்றியம் துவரிமான் ஊராட்சி வார்டு 4, மேலூா் ஒன்றியம் திருவாதவூர் ஊராட்சி வார்டு 8, கொட்டாம்பட்டி ஒன்றியம் மேலவளவு ஊராட்சி வார்டு 2, அலங்காநல்லூர் ஒன்றி யம் அ.கோவில்பட்டி ஊராட்சி வார்டு 4, செல்லம்பட்டி ஒன்றியம் கொடிக்குளம்  ஊராட்சி வார்டு 4, கோவிலாங்குளம் ஊராட்சி வார்டு 6, நாட்டார்மங்கலம் ஊராட்சி வார்டு 1, சேடப்பட்டி ஒன்றி யம் சூலப்புரம் ஊராட்சி வார்டு 5, தே. கல்லுப்பட்டி ஒன்றியம் சின்னபூலாம்பட்டி ஊராட்சி வார்டு 1, எல்.கொட்டானிப்பட்டி ஊராட்சி வார்டு 3, நல்லமரம் ஊராட்சி வார்டு 3, கள்ளிக்குடி ஒன்றியம் கள்ளிக் குடி ஊராட்சி வார்டு 3, வார்டு 4, வேப்  பன்குளம் ஊராட்சி வார்டு 5 ஆகிய 19 பதவிகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 9ம் தேதி காலை துவங்கி மாலை முடிகின்றது , வாக்கு எண்ணிக்கை ஜூலை  12 ஆம் தேதி  நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகா் தெரிவித்துள்ளார்.

அரசு உப்பு நிறுவனத்தில் பணியின்போது இறந்த தொழிலாளிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு சிஐடியு முயற்சியால் நிர்வாகம் வழங்க ஒப்புதல்

இராமநாதபுரம், ஜூலை 7- வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்  தில் பணியின்போது இறந்த தொழிலாளி யின் குடும்பத்திற்கு சிஐடியு முயற்சியால் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தில் சுமார் 30 ஆண்டுகளாக பணியாற்றிய முரு கன் (வயது 46) என்கிற தொழிலாளி பணி யின்போது திடீர் மரணமடைந்தார். ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்ற இடத்தில் அவசர சிகிச்சைக்கான ஏற்பாடு இல்லாததே இந்த மரணத்திற்கு காரணம் என்று தொழிலாளர்கள் குமுற லுடன் கூறுகின்றனர். மரணமடைந்த தொழிலாளியின் குடும்  பத்தை பாதுகாக்க நிவாரணமாக 10 லட்ச மும், அவருடைய குடும்பத்திற்கு வாரிசு வேலையும் வழங்க தமிழக அரசாங்கம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன நிறுவன தொழிலாளர் சங்கம் (சிஐடியு ) தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தது. உப்  பள தொழிலாளர்களின் ஆவேச போராட் டத்தை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன நிறுவனமும், தமி ழக முதலமைச்சரும் தலையிட்டு தொழிற் சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றி பிரச்சனையை சுமூகமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சிஐடியு  இராமநாதபுரம் மாவட்டக்குழு வலியுறுத்தி யது.  இந்நிலையில் பணியின்போது இறந்த தொழிலாளி முருகன் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உப்பு நிறு வன நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.  உப்பு நிறுவன மேலாண்மை இயக்குன ருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டு, இன்று நிதி வழங்கப்படுகிறது.பேச்சுவார்த்தையில் சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் வி.குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி, அரசு உப்பு நிறுவன தொழி லாளர் சங்க தலைவர் பச்சமால், செயலாளர் குமாரவடிவேல், நிர்வாகிகள் வடிவேல், முருகவேல், காட்டுராஜா, ஆனந்தராஜ், குழந்தைவேல் உட்பட கலந்து கொண்ட னர்.