அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மூத்தத் தலைவர் மறைந்த தோழர் சுனீத்சோப்ராவுக்கு விருதுநகரில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஆர்.வி நினைவகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் எம்.சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் ஆகியோர் தோழர் சுனித்சோப்ராவின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் குறித்து விளக்கிப் பேசினர்.