districts

img

குமரியில் சுற்றுலா தலங்கள் களை கட்டின

நாகர்கோவில், ஜூலை 10- கன்னியாகுமரியில் ஞாயிற் றுக்கிழமை விடுமுறை நாளன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணி கள் குவிந்தனர்.  முக்கடலும் சங்கமிக்கும் திரி வேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் ஞாயிறன்று அதிகாலையில் சூரியன் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக் கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமானோர் குவிந்தி ருந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்க டாஜலபதி கோவிலில் தரிசனத்துக்  காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.  விவேகானந்தர் நினைவு மண்ட பத்தை பார்வையிட  காலை 6 மணி யில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசா யனக் கலவை பூசும் பணி நடை பெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. காலையில் இருந்தே சுற்றுலா பய ணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  இதனால் விடுமுறை நாளான  ஜூலை 10ல்  சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலா  தலங்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்  பகுதியில் சுற்றுலா காவ‌லர்களு டன் கடலோர பாதுகாப்பு குழும  காவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.