சின்னாளபட்டி,ஏப்.12- திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழ கத்தில் தமிழ், இந்திய மொழிகள் புலத்தி லுள்ள மலையாள ஆய்வுகள் மையத் தின் சார்பில் மலையாள மகாகவி குமார னாசானின் 150ஆம் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது. விழாவிற்குத் தலைமையேற்றுப் பேசிய துணைவேந்தர் (பொ.) பேராசி ரியர் டி.டி.ரங்கநாதன் “தென்னிந்திய மக்களிடத்தில் பண்பாட்டு ஒற்றுமை காணப்படுகிறது என்றும் இம்மொழி களுக்கு இடையிலான ஒப்பிலக்கிய ஆய்வுகள் வளர வேண்டுமென்றும் குறிப் பிட்டார். மலையாளச் சிறுகதையாசிரி யரும் கேரளச் சாகித்திய அகாதெமியின் துணைத் தலைவருமான அசோகன் சருவில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ம.திருமலை , ஆகியோர் பேசினர். நிகழ் வில் பேராசிரியர் பா.ஆனந்தகுமார் தமி ழில் மொழிபெயர்த்த குமாரனாசானின் “வீழ்ந்த மலர்” (வீண பூவு) என்னும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஒ.முத்தையா வாழ்த்துரை வழங்கினார்.முன்னதாக புலமுதன்மையர் பேராசிரி யர் பா.ஆனந்தகுமார் வரவேற்றார். மலையாள ஆய்வுமையத்தின் இயக்கு நர், பேராசரியர் எஸ்.ஷாஜி நன்றி கூறினார்.