districts

img

“கூடல்நகர் நிறுத்தம் இரண்டாவது ரயில் நிலையம்” பாண்டியன், வைகையை முதற்கட்டமாக நிறுத்தக் கோரிக்கை

மதுரை, பிப்.24-  மதுரை கூடல்நகர் ரயில் நிறுத்தத்தை இரண்டாவது ரயில் நிலை யம் மாற்றுவது குறித்த முன்மொழிவு யோசிக்கப்படுகிறது என்றார் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன். கூடல்நகர் ரயில் நிலையத்தில் ஒரு இணைப்பு சாலை, ஒரு சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் இது  இண்டும் அமையும்போது நிச்சயம் கூடல்நகர் ரயில் நிலையம் அபி விருத்தி அடையும். இது குறித்த முழு மையான திட்டத்தை மார்ச் 10-ஆம் தேதி தென்னக ரயில் பொது மேலா ளர் தலைமையில் மதுரை கோட்டத்தை உள்ளடக்கிய நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கூட்டத்தில் இது குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும். இந்தக் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது. ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கூடல்நகர் ரயில் நிலையம் இரண்டா வது முனைமாக மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனுக் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சி யாக கூடல்நகர் ரயில்வே நிலையத்தை  இரண்டாவது முனையமாக மாற்று வேண்டுமன வலியுறுத்தி வருகிறோம். எங்களது ஆலோசனை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.  கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு மாநில அரசு சில பணிகளை செய்துதர வேண்டியுள்ளது.  இதை மாநில அரசின் கவனத் திற்குக் கொண்டு செல்வோம். அடுத்த பத்தாண்டுகளில் மிகப்பெரும் நெருக்கடியை மதுரை ரயில் நிலையம் சந்திக்கக் கூடும். கூடல்நகர் ரயில் நிலையம் இரண்டாவது முனையமாக மாற்றப்பட்டால் கூட்ட நெருக்கடியை தவிர்க்க முடியும். அதற்கான பணி களை மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செய்து முடிக்க வேண்டுமென்றார்.
கூடல்நகரில் நிற்கவேண்டும் வைகை, பாண்டியன்
முன்னதாக கூடல்நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கூடல்நகர் ரயில் நிலையத்தில் வைகை, பாண்டி யன் விரைவு ரயில்கள் நின்று செல்வ தற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.ஆய்விபோது மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவா னந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.