மதுரை மாநகராட்சிக்குட்பட்ட கோச்சடை விருத்தாசலம் தெருப் பகுதியிலும், இணைப்புத் தெருக்களிலும் கடந்த ஒரு மாதமாகப் பாதாளச் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஆறு போல் ஓடிக் கொண்டிருக்கிறது. குடியிருப்புகள் முன்பும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியவில்லை. குறிப்பாக இப்பகுதியில் பள்ளி ஒன்றும், பாஸ்போர்ட் அலுவலகமும் இயங்கிவருகிறது.