மதுரை, ஜன.12- குழாய் உடைந்து குடிநீர் மழைநீர் கால்வாயில் கழிவு நீருடன் கலக்கிறது. இதனால் சாலையில் அதிக அளவில் கழிவு நீர் தேங்குவதால் பெரும் அவதிப்படுவதாக வும் இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் கோச் சடை நடராஜ் நகர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மாநகராட்சி 66 ஆவது வார்டு கோச்சடை யில் நடராஜ் நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் அருகே குடிநீர் குழாய் உள்ளது. குடி நீர் வரும் நாட்கள் முழுவ தும் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு,தண்ணீர் வெளி யேறி மழைநீர் கால்வாய் வழி யாக சாக்கடை இணைப்பு களுக்கு சென்று விடுகிறது. இதனால் கழிவு நீர் கலந்த குடிநீர் சில தெருக்களில் வரு வதாகவும் இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவ தாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஜனவரி 11 புதன்கிழமை யன்று அதிகளவில் குடிநீர் பாதாளச் சாக்கடை வழியாக வெளியேறி தெரு முழுவதும் தேங்கியது.
இதனால் குழந் தைகள் பள்ளி செல்வதற்கு பெரும் சிரமப்பட்டனர். உடனடியாக அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் கழிவுநீரகற்றும் லாரியின் மூலம் தேங்கியிருந்த நீரை அப்புறப்படுத்தினர். அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாரிக்கண்ணு, நாகராஜ், முத்துராமலிங்கம் ஆகியோர் கூறுகையில், இதுபோன்ற நிகழ்வு குடிநீர் வரும் நாட்களில் நடக்கிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும்.இப்பகுதி யில் மழை நீர் கால்வாயை உடனடியாக தூர்வாரி சீர மைக்க வேண்டும். குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத் தில் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் குடிநீரு டன் கழிவுநீர் கலந்து வரு வதால் நோய்த் தொற்று ஏற் படும் அபாயம் உள்ளது என்று அதிகாரிகளிடம் தெரி வித்தனர். பகுதிக்குழு உறுப்பினர் தங்கவேல் கூறுகையில், மேலக்கால் மெயின் ரோடு பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் குடிநீர் குழாய் இணைப்பு செல்லும் இடத் தில் மூடி உடைந்த நிலை யில் உள்ளது. தற்போது தேனி மெயின் ரோட்டில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டதால் மேலக்கால் சாலையில் அதி களவில் வாகனங்கள் செல் கின்றன. இந்த பள்ளம் சரி யாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. அந்த இடத் தில் ஒரு மரக்கிளை ஊன் றப்பட்டுள்ளது. எதிரில் தனி யார் பள்ளி உள்ளது. எனவே உடனடியாக அங்கு மேல் மூடி அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.